/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு உதவி
/
மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு உதவி
ADDED : ஏப் 12, 2024 12:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்னுார்:ஒரசோலை கிராமத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு குன்னுார் பீசலு அறக்கட்டளை சார்பில் உதவி பொருட்கள் வழங்கப்பட்டது.
குன்னுாரில் உள்ள பீசலு அறக்கட்டளை சார்பில் மாதம் தோறும் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு பல்வேறு உதவி பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
இம்மாதம், கோத்தகிரி ஒரசோலை கிராமத்தில் மாற்று திறனாளி மாணவர்களுக்கு உட்பட பல்வேறு ஆடைகள் வழங்கப்பட்டன.
அறக்கட்டளை நிர்வாகி ஷாலினி முரளிதரன் தலைமையில், பள்ளி ஆசிரியர் மீனா, உடற்கல்வி ஆசிரியை திவ்யா முன்னிலையில் குழந்தைகளுக்கு உதவி பொருட்கள் வழங்கப்பட்டன.

