ADDED : ஆக 10, 2024 02:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெ.நா.பாளையம்;கேரள மாநிலம், வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவி பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
தமிழ்நாடு யு.பி.வி.சி., விண்டோ டோர் பேப்ரி கேட்டரிங் ஓனர்ஸ் அசோசியேசன் சார்பாக தலைவர் அமிர்தானந்தம் தலைமையில், 1.5 லட்ச ரூபாய் மதிப்பு பாய்கள், படுக்கை விரிப்புகள், துண்டுகள், உணவு தட்டுகள் மற்றும் சமையல் எண்ணெய் பாக்கெட்டுகள் வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்காக அனுப்பி வைக்கப்பட்டன. இவை கேரள மாநிலம், பாலக்காடு கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

