sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், ஜனவரி 05, 2026 ,மார்கழி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

வயநாடு மக்களுக்கு பொருட்கள் வழங்கி உதவி

/

வயநாடு மக்களுக்கு பொருட்கள் வழங்கி உதவி

வயநாடு மக்களுக்கு பொருட்கள் வழங்கி உதவி

வயநாடு மக்களுக்கு பொருட்கள் வழங்கி உதவி


ADDED : ஆக 27, 2024 02:33 AM

Google News

ADDED : ஆக 27, 2024 02:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பந்தலுார்;கேரளளாவில் நிலச்சரிவில் சிக்கி பாதிக்கப்பட்டுள்ள வயநாடு மக்களுக்கு, நீலகிரி மருந்து வணிகர்கள் சங்கம் பல்வேறு உதவிகளை வழங்கி உள்ளது.

கேரளா மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பல்வேறு தரப்பினரும் உதவிகள் செய்து வருகின்றனர். அதில், வீடுகள் மற்றும் பொருட்களை இழந்து, வாடகை வீடுகளில் குடியமர்த்தப்பட்ட மக்களுக்கு, நீலகிரி மாவட்ட மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில், தேவையான பொருட்கள் நேரடியாக வழங்கப்பட்டது.

அங்கு மேப்பாடி பகுதியில் வாழும், 20 குடும்பங்களுக்கு, தேவையான பாத்திரங்கள், உடை, கட்டில் மற்றும் மெத்தைகள், பீரோ மற்றும் நாற்காலிகள், பாய் மற்றும் கம்பளிகள், ஸ்டவ், குக்கர், மிக்ஸி உள்ளிட்ட அனைத்து பொருட்களும் வழங்கப்பட்டது.

இதனை சங்கத்தின் மாவட்ட செயலாளர் அப்சல் தலைமையில், பொருளாளர் மகேஷ், சில்லறை விற்பனையாளர்கள் பிரிவு தலைவர் ஹரிராமன், நிர்வாகிகள் ஆசப்ஜா, கிரீஸ்குமார், ரியாஸ் சத்திய நாராயணன், சதீஷ் ஆகியோர் வழங்கினர். இதனை பெற்றுக் கொண்ட பாதிக்கப்பட்ட மக்கள் சங்க நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us