sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

சிப்பம் கட்டும் அறை கட்டுமானத்துக்கு தோட்டக்கலைத்துறை மானியம்

/

சிப்பம் கட்டும் அறை கட்டுமானத்துக்கு தோட்டக்கலைத்துறை மானியம்

சிப்பம் கட்டும் அறை கட்டுமானத்துக்கு தோட்டக்கலைத்துறை மானியம்

சிப்பம் கட்டும் அறை கட்டுமானத்துக்கு தோட்டக்கலைத்துறை மானியம்


ADDED : ஜூலை 05, 2024 01:52 AM

Google News

ADDED : ஜூலை 05, 2024 01:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சூலூர்;காய்கறிகள், பழங்கள் சேகரிக்க பயன்படும் சிப்பம் கட்டும் அறை கட்ட, தோட்டக்கலைத்துறை சார்பில் மானியம் வழங்கப்படுகிறது.

சுல்தான்பேட்டை வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் ரமேஷ் அறிக்கை:

சுல்தான்பேட்டை வட்டாரத்தில் அப்பநாயக்கன்பட்டி, செஞ்சேரி புத்தூர், பச்சாபாளையம், குமாரபாளையம் ஆகிய ஊர்களில் ஒருங்கிணைந்த கிராம வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இங்கு, தேசிய தோட்டக்கலை இயக்கம் சார்பில், காய்கறிகள், பழங்கள் சேகரித்து சிப்பம் கட்ட பயன்படும் அறை கட்ட, 2 லட்சம் ரூபாய் மானியமாக வழங்கப்பட உள்ளது.

அறை கட்ட விரும்பும் விவசாயிகள், ஆதார், ரேஷன் அட்டை நகல், சிட்டா, அடங்கல், நில வரைபடம், 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களுடன் சுல்தான்பேட்டை ஒன்றிய அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் வட்டார தோட்டக்கலைத்துறை அலுலகத்தை வேலை நாட்களில் அணுகி பயன்பெறலாம். மேலும், t horticulture.tn.gov.in என்ற இணைய தளத்தில் பதிவு செய்து பயன் பெறலாம்.






      Dinamalar
      Follow us