sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

வறட்சியை தாங்கும் விதைகள் தயார் செய்வது எப்படி?

/

வறட்சியை தாங்கும் விதைகள் தயார் செய்வது எப்படி?

வறட்சியை தாங்கும் விதைகள் தயார் செய்வது எப்படி?

வறட்சியை தாங்கும் விதைகள் தயார் செய்வது எப்படி?


ADDED : ஏப் 24, 2024 10:01 PM

Google News

ADDED : ஏப் 24, 2024 10:01 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெ.நா.பாளையம்: பயிறு வகைகளில் விதைகளை கடினப்படுத்துதல் வாயிலாக, அவற்றை வறட்சியை தாங்கி வளர செய்ய முடியும் என, வேளாண் துறையினர், விவசாயிகளுக்கு அறிவுரை கூறியுள்ளனர்.

தற்போதைய கோடை பருவத்தில் குறுகிய கால பயிர்களான பயிறு வகைகளை, விவசாயிகள் சாகுபடி செய்யும் போது, வறட்சியை தாங்கி வளர, விதைகளை கடினப்படுத்தி விதைப்பதால், விதைகள் வேகமாக முளைத்து, ஆரம்ப காலத்தில் வறட்சியை தாங்கி வளர்ந்து, அதிக மகசூல் கொடுக்கும்.

100 மி.கி., ஜிங் சல்பேட் உப்பை சுமார் ஒரு லிட்டர் தண்ணீருடன் சேர்த்து, கரைசல் தயாரிக்க வேண்டும். பின்பு அதில், 350 மி.லி., கரைசலை எடுத்துக்கொண்டு, அதில் ஒரு கிலோ விதையை கலந்து சுமார், 3 மணி நேரம் ஊற வைத்து, பின்பு நிழலில் உலர்த்த வேண்டும்.

பழைய ஈரப்பதத்திற்கு விதையை உலர்த்தி, விதைப்பதற்கு பயன்படுத்த வேண்டும். இதேபோன்று பாசி பயிருக்கு, 100 மி.கி., மாங்கனிஷ் சல்பேட் உப்பினால் ஆன கரைசலில் விதைகளை, மேற்கூறியது போல மூன்று மணி நேரம் ஊறவைத்து பின்பு நிழலில் பழைய ஈர பதத்திற்கு உலர்த்தி, விதைகளை விதைப்புக்கு பயன்படுத்த வேண்டும்.

ஒரு ஏக்கருக்கு தேவையான விதைக்கு, 300 மி.கி., ஜிங்க் சல்பேட், 300 மி.கி., சல்பேட் எடுத்து, 3 லிட்டர் தண்ணீரில் கலந்து விதைகளை கடினப்படுத்தி பயன்படுத்த வேண்டும் என, வேளாண் துறையினர் குறிப்பிட்டனர்.






      Dinamalar
      Follow us