sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

மனைவியை கட்டையால் அடித்து கொன்ற கணவன் கைது

/

மனைவியை கட்டையால் அடித்து கொன்ற கணவன் கைது

மனைவியை கட்டையால் அடித்து கொன்ற கணவன் கைது

மனைவியை கட்டையால் அடித்து கொன்ற கணவன் கைது


ADDED : ஜூலை 06, 2024 08:41 PM

Google News

ADDED : ஜூலை 06, 2024 08:41 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்:நீலகிரி மாவட்டம், கூடலுார், தேவர் சோலை மச்சிக்கொல்லி பேபி நகரைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன், 47. இவரது மனைவி குஞ்சு, 40. ரவிச்சந்திரன் ஒரு மாதத்திற்கு முன், கூலி வேலைக்காக கர்நாடகா சென்றார்; இரு தினங்களுக்கு முன் வீட்டுக்கு வந்துள்ளார். வீட்டில் மனைவி இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

நீண்ட நேரத்துக்கு பின், மனைவி வீட்டுக்கு வந்தார். இருவருக்கும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த ரவிச்சந்திரன், கட்டையால் மனைவியை தாக்கியுள்ளார். பலத்த காயம் அடைந்த மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

குடி போதையில் இருந்த ரவிச்சந்திரன், மனைவி இறந்தது தெரியாமல் வீட்டில் உறங்கியுள்ளார். நேற்று முன்தினம் காலை மனைவி இறந்தது தெரிய வந்தது. தேவர்சோலை போலீசார் வழக்குப் பதிவு செய்து, ரவிச்சந்திரனை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us