/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அபாயம் என்ற பெயரில் நல்ல மரங்கள் வெட்டி சாய்ப்பு கண்காணிக்க வேண்டும்! மழைக்கால அவசர பணிகள் குறித்த மறு ஆய்வு அவசியம்
/
அபாயம் என்ற பெயரில் நல்ல மரங்கள் வெட்டி சாய்ப்பு கண்காணிக்க வேண்டும்! மழைக்கால அவசர பணிகள் குறித்த மறு ஆய்வு அவசியம்
அபாயம் என்ற பெயரில் நல்ல மரங்கள் வெட்டி சாய்ப்பு கண்காணிக்க வேண்டும்! மழைக்கால அவசர பணிகள் குறித்த மறு ஆய்வு அவசியம்
அபாயம் என்ற பெயரில் நல்ல மரங்கள் வெட்டி சாய்ப்பு கண்காணிக்க வேண்டும்! மழைக்கால அவசர பணிகள் குறித்த மறு ஆய்வு அவசியம்
ADDED : ஆக 17, 2024 12:51 AM
கோத்தகிரி: கோத்தகிரி உட்பட, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், அபாய மரங்கள் என்ற
பெயரில், நல்ல நிலையில் உள்ள மரங்களும் வெட்டி சாய்க்கப்படுவதாக,
குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நீலகிரியில் சோலைகள் மற்றும் சாலை ஓரங்களில் வானுயர்ந்து வளர்ந்து நிற்கும் பசுமை நிறைந்த பழமையான மரங்கள் மலை மாவட்டத்தின் அழகை கூட்டுகிறது. அதே நேரத்தில் ஆயுள் கடந்த மரங்களாலும் ஆபத்தும் அதிகமாக உள்ளது.
பருவ மழை காலங்களில் காற்று வீசும்போது, அபாய மரங்கள் சாலை மற்றும் குடியிருப்புகளில் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்படுவதுடன் குடியிருப்புகள் சேதம் அடைந்து, உயிரிழப்புகளும் நடக்கின்றன.
இதனால், பருவ மழை தீவிரம் அடைவதற்கு முன் அபாய மரங்களை அகற்ற மாவட்ட நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. அதன்படி, வனத்துறை சார்பில் சாலையோரம் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் உள்ள அபாய மரங்களை மட்டும் கணக்கு எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கோத்தகிரி- ஊட்டி இடையே கார்ஸ்வுட் பகுதி, ஊட்டியின் சுற்றுப்புற பகுதகிள், குந்தா, கூடலுார், பந்தலுார் சாலையோர பகுதிகளில், ஆபத்தான மரங்கள் கணக்கெடுக்கப்பட்டு, இதுவரை, 300 மரங்கள் வெட்டி அகற்றப்பட்டுள்ளன. எஞ்சிய மரங்களை அகற்றும் பணி நடந்து வருகிறது.
நல்ல மரங்களும் வெட்டி சாய்ப்பு
அதில், கோத்தகிரி - ஊட்டி சாலையில், கார்ஸ்வுட் பகுதியில் பெரிய அளவில் வானுயர்ந்த கற்பூர மரங்கள்; ஊட்டி நகரின் சில பகுதிகளில் கற்பூரம், சாம்பிராணி மரங்களை அகற்றும் பணி நடந்து வருகிறது. அதில், கார்ஸ்வுட் பகுதியில் போதிய வேர் பிடிமானம் இல்லாமல், லேசான காற்று வீசினாலும் விழும் நிலையில் உள்ள அதிகளவிலான மரங்கள் அப்படியே விடப்பட்டுள்ளன.
ஆனால், சோலையின் உட்பகுதியில் நல்ல நிலையில் உள்ள மரங்கள் அகற்றப்பட்டு வருகின்றன. இதில், பல்வேறு குளறுபடிகள் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால், வனத்துறைக்கு கூடுதல் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இந்த நிலை மாவட்டம் முழுவதும் தொடருவதாக, புகார் எழுந்துள்ளது.
மேலும், ஊட்டி அபாய மரங்கள் என்ற பெயரில், நல்ல நிலையில் உள்ள பழமையான மரங்களும் வெட்டி சாய்ப்பதால் சுற்றுலா நகரின் இயற்கை அழகு பாதிக்க வாய்ப்புள்ளது. சமீபத்தில், ஊட்டி ஸ்பென்சர்ஸ் - கார்டன் சாலையோரம் பழமையான சில நல்ல சாம்பிராணி மரங்களும் வெட்டப்படுவதால், அப்பகுதி இயற்கை அழகு பாதிக்கப்பட்டதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
உள்ளூர் மக்கள் கூறுகையில்,'சமீப காலமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், அபாய மரங்கள் என்ற பெயரில், நல்ல நிலையில் உள்ள மரங்களும் வெட்டி சாய்க்கப்படுவதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இத்தகைய குற்றச்சாட்டுகள் எழாத வகையில், சுற்றுலா துறை அமைச்சர், மாவட்ட கலெக்டர்; வனத்துறை உயர் அதிகாரிகள் ஒரு குழுவை அமைத்து, மரங்கள் வெட்டப்பட்ட பகுதிகளில் மறு ஆய்வு செய்ய வேண்டும்.
அபாய நிலையில் உள்ள மரங்களை மட்டும் வெட்ட அனுமதி தர வேண்டும். மாவட்டத்தின் இயற்கை அழகை போற்றும் நல்ல நிலையில் உள்ள மரங்களை காக்கும் வகையில், இடையூறாக உள்ள அவற்றின் கிளை மட்டும் வெட்டப்பட வேண்டும்,' என்றனர்.