/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊட்டியில் இந்திய சிறு, குறு வர்ண உற்பத்தியாளர்கள் சங்க கருத்தரங்கம்
/
ஊட்டியில் இந்திய சிறு, குறு வர்ண உற்பத்தியாளர்கள் சங்க கருத்தரங்கம்
ஊட்டியில் இந்திய சிறு, குறு வர்ண உற்பத்தியாளர்கள் சங்க கருத்தரங்கம்
ஊட்டியில் இந்திய சிறு, குறு வர்ண உற்பத்தியாளர்கள் சங்க கருத்தரங்கம்
ADDED : ஜூன் 30, 2024 02:33 AM

ஊட்டி:நீலகிரி மாவட்டம், ஊட்டியில், இந்திய சிறு, குறு வர்ண உற்பத்தியாளர் சங்க, தமிழ்நாடு மண்டலத்தின் இரண்டு நாள் கருத்தரங்கம் நடந்தது. சங்க, தமிழக மண்டல ஒருங்கிணைப்பாளர் பாபு தியாகராஜன் வரவேற்றார். முன்னாள் கல்வி அமைச்சர் பாண்டியராஜன் கருத்தரங்கை துவக்கி வைத்தார்.
கருத்தரங்கில், தரமான மூலபொருட்களின் முக்கியத்துவம்; வர்ணம் தயாரிப்பில் மேற்கொள்ள வேண்டிய நவீன தொழில்நுட்பம்; நுகர்வோருக்கு விற்பனை செய்வதில் பின்பற்ற வேண்டிய நுணுக்கம்; டிஜிட்டல் தொழில்நுட்ப மேம்பாடு உட்பட, பல்வேறு அம்சங்கள் குறித்து, பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த சங்க நிர்வாகிகள் பேசினர்.
சங்க ஒருங்கிணைப்பாளர் பாபு தியாகராஜன் கூறியதாவது:
இந்திய சிறு, குறு வர்ண உற்பத்தியாளர்கள் சங்கம், 11 மண்டலங்களாக உள்ளன. தமிழ்நாடு மண்டலத்தின் சார்பில் தற்போது நடந்த இரு நாள் கருத்தரங்கில், அகில இந்திய தலைவர் விஜய்டட்லி, துணைத் தலைவர் தினேஷ் பிரபு மற்றும் உலகின் ஆறு நாடுகளில் இருந்து பெயின்ட் தொழிற்சார்ந்த வல்லுனர்கள் பங்கேற்றனர். பெயின்ட் தொழிலில் மேற்கொள்ள வேண்டிய நவீன தொழில்நுட்ப மேம்பாடு குறித்த கலந்துரையாடல் நடந்தது. வல்லுனர்களுடன் விவாதிக்கப்பட்டு, முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழ்நாடு மண்டல தலைவர் மோகன்ராஜ், துணை தலைவர் கார்த்திகேயன், பொருளாளர் விக்னேஷ், செயலர் பால்ராஜ் முன்னிலை வகித்தனர்.
இதில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், 300 அங்கத்தினர்கள் குடும்பத்துடன் பங்கேற்றனர்.