sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

யானை வாழ்விட பகுதியில் வெட்டப்படும் பலா மரங்கள்

/

யானை வாழ்விட பகுதியில் வெட்டப்படும் பலா மரங்கள்

யானை வாழ்விட பகுதியில் வெட்டப்படும் பலா மரங்கள்

யானை வாழ்விட பகுதியில் வெட்டப்படும் பலா மரங்கள்


ADDED : மார் 09, 2025 10:54 PM

Google News

ADDED : மார் 09, 2025 10:54 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்னுார்; குன்னுார் கே.என்.ஆர்., அருகே இரவு பகலாக, பலா உட்பட காட்டு மரங்கள் வெட்டப்பட்டு வருகின்றன.

இப்பகுதியின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆர்வலர்கள் கூறுகையில்,'இப்பகுதியில் பலா, நகா, வெண் தேக்கு உட்பட காட்டு மரங்கள் வெட்டி, 11 லாரிகளில் இதுவரை கொண்டு செல்லப்பட்டுள்ளன. சமீப காலமாக மேட்டுப்பாளையம் மலை பாதையோர இயற்கை வளங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன. இங்கு, அனுமதி வாங்கி மரங்கள் வெட்டப்பட்டதாக கூறப்பட்டாலும், கூடுதல் மரங்களை வெட்டி செல்ல வாய்ப்புள்ளது. இதனால், வன அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்,' என்றனர்.

குன்னுார் வனச்சரகர் ரவீந்திரநாத் கூறுகையில்,''அங்குள்ள பட்டா இடத்தில், 80 பலா மரங்கள் வெட்ட அனுமதி கேட்கப்பட்டது. அதில், 27 முதிர்ச்சியடைந்த பலா மரங்கள், என கலெக்டரிடம் இரு அனுமதிகள் பெறப்பட்டு வெட்டப்படுகிறது. மற்ற மரங்கள் வெட்டப்படுவதில்லை. அப்பகுதியில் மீண்டும் பலா நாற்றுக்கள் நடவு செய்வதாகவும் கூறியுள்ளனர்,'' என்றார்.






      Dinamalar
      Follow us