sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

கூத்தாண்டவர் கோவில் திருவிழா: திருநங்கைகள் பங்கேற்று வழிபாடு

/

கூத்தாண்டவர் கோவில் திருவிழா: திருநங்கைகள் பங்கேற்று வழிபாடு

கூத்தாண்டவர் கோவில் திருவிழா: திருநங்கைகள் பங்கேற்று வழிபாடு

கூத்தாண்டவர் கோவில் திருவிழா: திருநங்கைகள் பங்கேற்று வழிபாடு


ADDED : மே 12, 2024 11:55 PM

Google News

ADDED : மே 12, 2024 11:55 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பந்தலுார்;பந்தலுார் அருகே உப்பட்டி காட்டிக்குன்னு பகுதியில், கூத்தாண்டவர் கோவில் அமைந்துள்ளது.

கோவில் வருடாந்திர திருவிழா கடந்த, 10ம் தேதி காலை சிறப்பு பூஜைகள் மற்றும் கொடியேற்றம், காப்பு கட்டுதலுடன் துவங்கியது. திருநங்கை கார்த்திகா குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். பிதர்காடு வனத்துறை வனக்காவலர் பிரபு மற்றும் பிந்து ஆகியோர் கொடியேற்றினர்.

மறுநாள் காலை நாக கன்னி பூஜை மற்றும் முனி, காளி தெய்வங்களுக்கு பலி பூஜைகள் நடந்தது. நேற்று காலை ஐயன் கூத்தாண்டவரின் கண் திறப்பு பூஜையும், தொடர்ந்து வழி பூஜைகள் நடந்தது.

தொடர்ந்து திருநங்கைகள் சங்க தலைவி நிஷா மற்றும் கார்த்திகா முன்னிலையில் கோவில் பூஜாரி ஆசை தலைமையில் திருநங்கைகளுக்கு தாலி கட்டும் வைபவம் நடந்தது. அதனை அடுத்து திருநங்கைகள் கும்மி ஆட்டம் மற்றும் தேங்காய் உடைத்தல் நிகழ்ச்சிகள் நடந்தது.

அதனையடுத்து, தாலி கட்டிக் கொண்ட திருநங்கைகள், தலையில் முக்காடு போட்டு ஒப்பாரி வைத்து வந்து, தாலி அறுத்து வளையல் உடைத்து மீண்டும் ஒன்று கூடி ஒப்பாரி வைத்தனர். கூத்தாண்டவர்க்கு பூஜை செய்து வழிபட்டனர். ஏற்பாடுகளை நிர்வாகிகள் கூத்தையன், செல்வரத்தினம், வேரான், கண்ணன் தலைமையிலான குழுவினர் மற்றும் திருநங்கைகள் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us