/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
35 நிறுவனங்கள் மீது தொழிலாளர் துறை நடவடிக்கை
/
35 நிறுவனங்கள் மீது தொழிலாளர் துறை நடவடிக்கை
ADDED : மே 01, 2024 10:53 PM
குன்னுார் : 'நீலகிரியில், மே தினத்தில் இரட்டிப்பு சம்பளம், மாற்று விடுமுறை வழங்காமல் பணியாளர்களை பணிக்கு அமர்த்திய, 35 நிறுவனங்கள் மீது நடவடிக்கைஎடுக்கப்படும்,' என, தொழிலாளர் உதவி ஆணையர் தெரிவித்துள்ளார்.
சென்னை, தொழிலாளர் ஆணையர் அதுல் ஆனந்த் உத்தரவின் பேரில், தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) முருகேசன் தலைமையில், குன்னுார், ஊட்டி, கோத்தகிரி, கூடலுார் பகுதிகளில் கடைகள், வணிக, உணவு நிறுவனங்கள், தோட்ட நிறுவனங்களில் மே தினத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
நீலகிரி மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) முருகேசன் வெளியிட்ட அறிக்கையில்,'மாவட்டத்தில் நடந்த ஆய்வில், 69 நிறுவனங்களில் ஆய்வு செய்யப்பட்டது. 35 நிறுவனங்களில், முரண்பாடு கண்டறிந்து, சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

