/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக்கு கடனுதவி
/
பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக்கு கடனுதவி
பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக்கு கடனுதவி
பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக்கு கடனுதவி
ADDED : ஜூலை 13, 2024 08:29 AM
ஊட்டி : பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினை சார்ந்த, தனிநபர் மற்றும் குழுக்களுக்கு கடன் உதவி வழங்கப்படுகிறது.
மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
தமிழ்நாடு பொருளாதார மேம்பாட்டு கழகம் சார்பில் கடன் வழங்கப்படும் நிலையில், விண்ணப்பதாரர் அந்த குறிப்பிட்ட வகுப்பை சேர்ந்தவராகவும், குடும்ப ஆண்டு வருமானம், 3 லட்சம் ரூபாய்க்கும் மிகாமல் இருப்பதுடன், 18 வயது பூர்த்தி அடைந்து, 60 வயதுக்குள் இருக்க வேண்டும்.
ஒரு குடும்பத்திற்கு, ஒரு நபருக்கு மட்டுமே கடன் உதவி வழங்கப்படும். தனிநபர் கடன் திட்டத்தின் கீழ், சிறு வர்த்தகம், வணிகம், விவசாயம் மற்றும் அதனை சார்ந்த தொழில்கள், கைவினை பொருட்கள் மற்றும் மரபு வழி சார்ந்த தொழிலில் செய்வதற்கு அதிகபட்சமாக, 15 லட்சம் ரூபாய் வரை கடன் வழங்கப்படும். ஆண்டுக்கு, 7 சதவீதம் வட்டி நிர்ணயம்.
குழு கடன் வழங்கும் திட்டத்தின் கீழ், சுய உதவி குழு உறுப்பினர் சிறு தொழில், வணிகம் செய்வதற்கு, ஒருவருக்கு அதிகபட்சமாக, 1.25 லட்சம் ரூபாய் வரையும், குழு ஒன்றுக்கு அதிகபட்சமாக, 15 லட்சம் ரூபாய் வரை, 6 சதவீத வட்டியில் கடன் வழங்கப்படும்.
ஆறு மாதம் பூர்த்தி வேண்டும்
கடன் பெறுபவர்களின் குழு துவங்கி ஆறு மாதங்கள் பூர்த்தியாகி இருக்க வேண்டும். மகளிர் திட்ட அலுவலரால், தரம் செய்யப்பட்டிருக்க வேண்டும். ஒரு குழுவில், 20 உறுப்பினர்கள் அனுமதிக்கப்படுவர். இரு பாலருக்கான சுய உதவி குழு உறுப்பினர்களுக்கும் கடன் வழங்கப்படும்.
பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக உள்ளவர்களுக்கு, ஒரு கறவை மாட்டிற்கு, 30 ஆயிரம் வீதம், இரண்டு கறவை மாடுகள் வாங்க அதிகபட்சம், 60 ஆயிரம் ரூபாய், 7 சதவீத வட்டியில் கடன் வழங்கப்படும்.
இந்த கடன் உதவியை, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் மற்றும் நீலகிரி மாவட்டம் மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளில் பெற்று கொள்ளலாம். இணையதள முகவரியில், www.tabcedco.tn.gov.in படி இறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.
ஜாதி, வருமானம், பிறப்பிட சான்றிதழ், ரேஷன் கார்டு, ஓட்டுனர் உரிமம், ஆதார் அட்டை மற்றும் வங்கி கூறும் ஆவண நகல்களுடன் விண்ணப்பிக்கலாம்.
எனவே, மாவட்டத்தில் வசிக்கும் அந்த குறிப்பிட்ட வகுப்பை சேர்ந்த தனி நபர் மற்றும் குழுக்கள் பயன்பெறலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.