தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ மெக் ஐவரின் 150 -வது நினைவு தினம் அனுஷ்டிப்பு

மெக் ஐவரின் 150 -வது நினைவு தினம் அனுஷ்டிப்பு

மெக் ஐவரின் 150 -வது நினைவு தினம் அனுஷ்டிப்பு


ADDED : ஜூன் 08, 2026 07:20 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 08, 2026 07:20 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஊட்டி: ஊட்டி தாவரவியல் பூங்காவை கட்டமைத்த,மெக் ஐவரின், 150 வது நினைவு தினத்தையொட்டி அதிகாரிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

தாவரவியல் பூங்காவை, 1848-ம் ஆண்டு இங்கிலாந்து நாட்டை சேர்ந்த வில்லியம் கிரகம் மெக்ஐவர் என்ற கட்டட கலை வல்லுனர் தொடங்கி வைத்தார். 19 ஆண்டுகளுக்கு பிறகு பூங்கா பணிகள் நிறைவடைந்தது. பின்னர், 1867-ம் ஆண்டு சுற்றுலா பயணிகளுக்காக திறந்து வைக்கப்பட்டது.

இந்த பூங்காவில் பல்வேறு நாடுகளின், 50 வகையான மரங்களும், 250 விதமான மலர் செடிகளும் உள்ளன. பூங்காவை உருவாக்கிய மெக் ஐவர், 1876-ம் ஆண்டு ஜூன், 8ம் தேதி இறந்தார். அவரது நினைவு நாள் ஒவ்வொரு ஆண்டும் மாவட்ட நிர்வாகம் மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பாக கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில், நேற்று அவரது 150-வது நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது. ஊட்டி ஸ்டீபன் சர்ச் வளாகத்தில் அமைந்துள்ள அவரது கல்லறைக்கு கலெக்டர் லட்சுமி பவ்யா, தோட்ட கலைத்துறை இணை இயக்குனர் நவநீதா, உதவி இயக்குனர் பெபிதா உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us