sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

-சேரம்பாடியில் 'மொபைல் போன்' சிக்னல் பாதிப்பு; 'வாக்கி- டாக்கிக்கு' மாறிய வனத்துறை

/

-சேரம்பாடியில் 'மொபைல் போன்' சிக்னல் பாதிப்பு; 'வாக்கி- டாக்கிக்கு' மாறிய வனத்துறை

-சேரம்பாடியில் 'மொபைல் போன்' சிக்னல் பாதிப்பு; 'வாக்கி- டாக்கிக்கு' மாறிய வனத்துறை

-சேரம்பாடியில் 'மொபைல் போன்' சிக்னல் பாதிப்பு; 'வாக்கி- டாக்கிக்கு' மாறிய வனத்துறை


ADDED : டிச 23, 2024 10:23 PM

Google News

ADDED : டிச 23, 2024 10:23 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பந்தலுார்; பந்தலுார் அருகே சேரம்பாடி டான்டீ, ஏலியாஸ் கடை பகுதிகளில், மொபைல் போன் சிக்னல் இல்லை. இதனால், இந்த பகுதியில் எந்த தகவல் பரிமாற்றங்களும் மேற்கொள்ள இயலாத நிலையில் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். தற்போது, இந்த பகுதியில் 'புல்லட்' என்று அழைக்கப்படும் யானை, தொடர்ச்சியாக குடியிருப்புகளை இடித்து வருவதால், அதனை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் வன குழுவினர் ஈடுபட்டு உள்ளனர்.

இந்நிலையில், யானை நடமாட்டம் குறித்து உடனுக்குடன் தகவல் பரிமாற்றம் மேற்கொள்ள இயலாத நிலையில், வனத்துறை பணியாளர்களுக்கு, 54 வாக்கி--டாக்கி வழங்கப்பட்டு உள்ளது.

'இ--பேக்' முறையில், 200 மீட்டர் தொலைவுக்கு இணைப்பு கிடைக்கும் வகையில், இது செயல்படுத்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் தொழிலாளர்கள் குடியிருப்பு மற்றும் தேயிலை தோட்டங்கள், இதனை ஒட்டிய வனப்பகுதிகளில் யானைகள் நடமாட்டம் குறித்து உடனுக்குடன் தகவல்களை தெரிவித்து, பயன் பெற முடியும்.

இதன் பயன்பாடு குறித்து, கூடலுார் வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு மற்றும் உதவி வன பாதுகாவலர் கருப்பையா ஆகியோர் வனத்துறையினருக்கு பயிற்சி மற்றும் விளக்கங்களை அளித்தனர்.

வாசலில் மிளகாய் துாள் தடவிய துணி...

பந்தலுார் சுற்றுப்புற பகுதிகளில், நேற்று முன்தினம் யானை ஊருக்குள் வராமல் தடுக்க 'மஸ்து' ஏற்பட்ட யானைகளின் சாணம் தெளிக்கப்பட்டது. நேற்று மிளகாய் துாள், வேப்ப எண்ணெய் தடவிய துணிகளை வீட்டு வாசல்களில் தொங்கவிடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். 'இதன் வாசனையை நுகரும் யானைகள் அங்கிருந்து வெளியேறும்,' என, கால்நடை மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில்,'புல்லட் யானையை முதுமலைக்கு பிடித்து செல்ல வேண்டும்,' என, வலியுறுத்தி, 26ம் தேதி சேரம்பாடி வனச்சரகர் அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட தோட்ட தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் முடிவு செய்துள்ளனர்.








      Dinamalar
      Follow us