ADDED : ஜூலை 31, 2026 12:50 PM

கூடலுார்: கூடலுார் நெடுஞ்சாலையோரம் நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றும் பணி நடந்தது.
கூடலுார் நகரில் சாலையோர நடைபாதைகளில், தொடரும் ஆக்கிரமிப்புகளால் மக்கள் நடந்து செல்ல சிரமப்பட்டு வருகின்றனர். நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், தேசிய நெடுஞ்சாலை துறையினர் சமீபத்தில் நடைபாதையில் ஆய்வு செய்து, ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற அறிவுறுத்தினர்.
அதன் அடிப்படையில், தேசிய நெடுஞ்சாலை துறையினர், கூடலுார் நகராட்சி ஊழியர்கள், போலீசார் பாதுகாப்புடன் நடைபாதையில் ஆய்வு செய்து ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றினர். சிலர் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.
நெடுஞ்சாலை துறையினர் கூறுகையில்,‘தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ள நடைபாதையை தொடர்ந்து ஆய்வு செய்யப்படும். ஆய்வின் போது, நடைபாதையை ஆக்கிரமித்து வைக்கப்படும் கடைகள் அகற்றப்படும்,’என்றனர்.
