sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ அடிப்படை வசதிகள் இல்லை: கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

அடிப்படை வசதிகள் இல்லை: கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

அடிப்படை வசதிகள் இல்லை: கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்


ADDED : மார் 25, 2024 10:36 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 25, 2024 10:36 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

பந்தலுார்:பந்தலுார்அருகே நெல்லியாளம் நகராட்சி, 7-வது வார்டில் எம்.ஜி.ஆர்., நகர் அமைந்துள்ளது. இங்கு, 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் அமைந்துள்ளன.

அதில், ஒரு பகுதியில் கழிவு நீர் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு பல மாதங்கள் கடந்தும், அதனை சீரமைக்க பொதுமக்கள் பல்வேறு கட்ட போராட்டம் நடத்திய நிலையில், நகராட்சி நிர்வாகம் கால்வாய் அமைக்காமல் அலட்சியம் கட்டி வருகிறது. இதனால், கழிவுநீர் தேங்கி நின்று, பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது.

மேலும் குடிநீர் கிணற்றில் கழிவு நீர் கலந்து நோய் பாதிப்பு ஏற்படுவதுடன், நடைபாதை சேதமடைந்ததால் வாகனம் வந்து செல்ல முடியாமல் பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் இப்பகுதி மக்கள் தங்கள் வீடுகளில் கருப்பு கொடிகள் கட்டி, ஓட்டு கேட்டு வர எதிர்ப்பு தெரிவித்து பேனர் வைத்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இன்ஸ்பெக்டர் சங்கரேஸ்வரன் பொதுமக்களிடம் பேசுகையில், 'அதிகாரிகளிடம் பேசி தீர்வு ஏற்படுத்தி தரப்படும்,' என உறுதி அளித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us