sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

சாலை பராமரிப்பு இல்லை சுற்றுலா பயணிகள் அதிருப்தி

/

சாலை பராமரிப்பு இல்லை சுற்றுலா பயணிகள் அதிருப்தி

சாலை பராமரிப்பு இல்லை சுற்றுலா பயணிகள் அதிருப்தி

சாலை பராமரிப்பு இல்லை சுற்றுலா பயணிகள் அதிருப்தி


ADDED : மே 29, 2024 09:58 PM

Google News

ADDED : மே 29, 2024 09:58 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்:

கூடலுார் நாடுகாணியில் வாகன நுழைவு வரி வசூல் செய்தும், தமிழக -கேரள எல்லையில் சேதமடைந்து வரும் சாலையை சீரமைக்க நடவடிக்கை இல்லாததால் பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

கூடலுார்- கோழிக்கோடு சாலை நாடுகாணியிலிருந்து, கீழ்நாடுகாணி வழியாக, மலப்புரம், திருச்சூர், பாலக்காடு, உள்ளிட்ட கேரள மாநிலத்தின் முக்கிய ஊர்களுக்கு செல்லும் சாலை பிரிந்து செல்கிறது.

இச்சாலை, தமிழக, கேரளா, கர்நாடகத்தில் இணைக்கும் முக்கிய வழித்தடம் என்பதால் எப்போதும் வாகன போக்குவரத்து இருக்கும்.

கேரளாவிலிருந்து இவ்வழியாக, நீலகிரி மாவட்ட பதிவு எண் கொண்ட வாகனங்களை தவிர்த்து, பிற வாகனங்களுக்கு நாடுகாணியில் வாகன நுழைவு வரி வசூல் செய்து வருகின்றனர்.

தமிழக - கேரளாவை இணைக்கும் இந்த சாலையில், நாடுகாணி முதல் மாநில எல்லையான கீழ்நாடுகாணி வரையிலான, 6 கி.மீ., துாரம் தமிழக பகுதியில் உள்ளது. பல இடங்களில், சாலை சேதமடைந்துள்ளது.

இவ்வழியாக, நீலகிரிக்கு வரும் வாகனங்களுக்கு, அரசு நுழைவு கட்டணம் வசூல் செய்தும், சேதம் அடைந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை இல்லாததால் சுற்றுலா பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

ஓட்டுனர்கள் கூறுகையில், 'கேரளாவில் இருந்து இவ்வழியாக பயணிக்கும் அனைத்து வாகனங்களுக்கும் நுழைவு கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. ஆனால், இப்பகுதியில் சேதமடைந்த சாலை பராமரிக்க நடவடிக்கை இல்லை. தவறாது நுழைவு வரி வசூல் செய்வது போன்று, சேதமடைந்த பகுதிகளை தவறாமல் சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.






      Dinamalar
      Follow us