sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

ஆக்கிரமிப்பு கட்டடத்திற்கு 'நோட்டீஸ்' வருவாய் துறையினர் நடவடிக்கை

/

ஆக்கிரமிப்பு கட்டடத்திற்கு 'நோட்டீஸ்' வருவாய் துறையினர் நடவடிக்கை

ஆக்கிரமிப்பு கட்டடத்திற்கு 'நோட்டீஸ்' வருவாய் துறையினர் நடவடிக்கை

ஆக்கிரமிப்பு கட்டடத்திற்கு 'நோட்டீஸ்' வருவாய் துறையினர் நடவடிக்கை


ADDED : ஜூலை 20, 2024 01:09 AM

Google News

ADDED : ஜூலை 20, 2024 01:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோத்தகிரி:'கோத்தகிரியில் தனியார் 'பார்' ஆக்கிரமிப்பில் உள்ளதால், ஒரு மாதத்திற்குள் அகற்ற வேண்டும்,' என, வருவாய் துறையினர் நோட்டீஸ் ஒட்டினர்.

கோத்தகிரி பஸ்நிலையம் -தாலுகா அலுவலக சாலையில், பழைய போலீஸ் ஸ்டேஷனை ஒட்டி, தனியார் 'பார்' மற்றும் ஹோட்டலுடன் அமைந்துள்ளது.

இந்த குறிப்பிட்ட 'பார்', போலீஸ் ஸ்டேஷனுக்கு சொந்தமான நிலத்தில் ஆக்கிரமிப்பில் இருப்பதாக புகார் எழுந்தது. வருவாய் துறையினர், மூன்று மாதங்களுக்கு முன்பு, போலீசார் முன்னிலையில், இருமுறை நில அளவை செய்து உறுதி செய்து, 'ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்,' என, சம்பந்தப்பட்ட ஊழியர்களிடம் தெரிவித்தனர்.

இருப்பினும், ஆக்கிரமிப்பு அகற்றப்படவில்லை. இந்நிலையில், கோத்தகிரி தாசில்தார் உத்தரவுப்படி நேற்று, வி.ஏ.ஓ., ராஜ்கமல், வருவாய் துறை உதவியாளர் அஜ்மீர் காஜா ஆகியோர் கட்டடத்துக்கு 'நோட்டீஸ்' ஒட்டினர்.






      Dinamalar
      Follow us