/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மாநில எல்லையில் மூன்று மொழிகளில் அறிவிப்பு பலகை; சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பு
/
மாநில எல்லையில் மூன்று மொழிகளில் அறிவிப்பு பலகை; சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பு
மாநில எல்லையில் மூன்று மொழிகளில் அறிவிப்பு பலகை; சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பு
மாநில எல்லையில் மூன்று மொழிகளில் அறிவிப்பு பலகை; சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பு
ADDED : பிப் 21, 2025 10:41 PM

கூடலுார்; நீலகிரி மாவட்டத்தில், பிளாஸ்டிக் தடை குறித்து, நாடுகாணி உள்ளிட்ட மாநில எல்லைகளில் தமிழ், ஆங்கிலம், மலையாளம் மொழிகளில் அறிவிப்பு பலகைகள் வைக்க வேண்டும்.
நீலகிரி மாவட்டத்தின், சுற்றுச்சூழலை பாதுகாக்க, 21 வகையான பிளாஸ்டிக் பொருட்கள், பிளாஸ்டிக் தண்ணீர் மற்றும் குளிர்பான பாட்டில்கள் விற்பனை செய்யவும், பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
வெளிமாநில சுற்றுலா பயணிகள் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் எடுத்து வருவதை தடுக்க, மாநில எல்லைகளில், தற்காலிக ஊழியர்கள் சுற்றுலா வாகனங்களில், சோதனை செய்து, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், தமிழக -கேரளா எல்லையான நாடுகாணியில், சோதனை பணியில் உள்ள ஊழியர்களுக்கு பல சுற்றுலா பயணிகள் ஒத்துழைப்பு தந்தாலும், சில சுற்றுலா பயணிகள், ஊழியர்களிடம் வாக்குவாதத்திலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனை தவிர்க்க, நீலகிரியில் பிளாஸ்டிக் தடை குறித்து, மாநில எல்லையில் உள்ள சோதனை சாவடிகளில் மிழ் உள்ளிட்ட மூன்று மொழிகளில் தெளிவான அறிவிப்பு பலகையில் வைக்க வலியுறுத்தியுள்ளனர்.
சமூக ஆர்வலர்கள் கூறுகையில், 'கூடலுாரை ஒட்டி, தமிழக -கேரள எல்லையில், பிளாஸ்டிக் தடை குறித்து, தமிழ் மட்டுமின்றி ஆங்கிலம் மற்றும் மலையாளத்திலும் தெளிவான அறிவிப்பு பலகை வைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

