sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

ஊட்டியை மாநகராட்சியாக மாற்றும் திட்டத்துக்கு எதிர்ப்பு

/

ஊட்டியை மாநகராட்சியாக மாற்றும் திட்டத்துக்கு எதிர்ப்பு

ஊட்டியை மாநகராட்சியாக மாற்றும் திட்டத்துக்கு எதிர்ப்பு

ஊட்டியை மாநகராட்சியாக மாற்றும் திட்டத்துக்கு எதிர்ப்பு


ADDED : ஆக 20, 2024 10:11 PM

Google News

ADDED : ஆக 20, 2024 10:11 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி : 'ஊட்டி நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தும் திட்டத்தில் நஞ்சநாடு ஊராட்சியை இணைக்க கூடாது,' என, கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஊட்டி நகராட்சி, 1866-ம் ஆண்டு உருவானது. தற்போது, நகராட்சியின் எல்லையை விரிவாக்கம் செய்து, மாநகராட்சியாக தரம் உயர்த்தினால், அதிக அளவில் அரசு திட்டங்கள், நிதி செயல்பாட்டுக்கு வரும்.

இதன் மூலம் உள்ளூர் மக்களின் வாழ்வாதாரமும், பொருளாதாரமும் உயர வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. இதற்கான, அவசர கூட்டம் நடத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மாநில அரசுக்கு அனுப்பப்பட்டது.

இந்த திட்டத்தில், ஊட்டி நகராட்சியுடன், கேத்தி பேரூராட்சி மற்றும் இத்தலார், உல்லத்தி, நஞ்சநாடு, தொட்டபெட்டா ஆகிய ஊராட்சி பகுதிகளை இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு கேத்தி உட்பட அனைத்து கிராம மக்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், நஞ்சநாடு ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில், 'ஊட்டி நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தும் திட்டத்தில், நஞ்சநாடு ஊராட்சியை இணைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்,' என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.






      Dinamalar
      Follow us