/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மஞ்சூர் அருகே தனியார் ஆக்கிரமித்த பொது இடத்தை மீட்க உத்தரவு
/
மஞ்சூர் அருகே தனியார் ஆக்கிரமித்த பொது இடத்தை மீட்க உத்தரவு
மஞ்சூர் அருகே தனியார் ஆக்கிரமித்த பொது இடத்தை மீட்க உத்தரவு
மஞ்சூர் அருகே தனியார் ஆக்கிரமித்த பொது இடத்தை மீட்க உத்தரவு
ADDED : பிப் 24, 2025 10:09 PM

ஊட்டி; ;பொது இடத்தை தனியார் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டு தர கோரி கிராம மக்கள் அளித்த மனு மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மஞ்சூர் அருகே, கீழ்குந்தா பேரூராட்சிக்கு உட்பட்ட முள்ளிமலை கிராமத்தில் நுாற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.
அப்பகுதியை சேர்ந்த ஒருவர் கிராமத்தின் பொது மைதானத்தை ஆக்கிரமிப்பு செய்திருப்பதாக கூறி, ஊர் தலைவர் போஜன் தலைமையில் கிராம மக்கள் கடந்த, டிச., 10ம் தேதி கலெக்டர் அலுவலக குறை தீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் லட்சுமி பவ்யாவை சந்தித்து ஆக்கிரமிப்பு பிரச்னை தொடர்பாக மனு அளித்தனர். 'ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, கலெக்டர் உத்தரவிட்டார்.
வருவாய் துறையினர் ஆய்வு மேற்கொண்டு ஆக்கிரமிப்பை அகற்ற சென்றபோது, சம்பந்தப்பட்ட நபருக்கும்; அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இந்நிலையில், மீண்டும் ஊர் தலைவர் தலைமையில் பெண்கள் உட்பட்ட ஏராளமானோர், நேற்று கலெக்டர் அலுவலக குறை தீர்க்கும் கூட்டத்திற்கு வந்து கலெக்டரை சந்தித்து மனு அளித்தனர். அப்போது, 'குந்தா வருவாய் துறையினர் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு ஆக்கிரமிப்பை மீட்க வேண்டும்,' என, கலெக்டர் உத்தரவிட்டார்.

