sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

கிராமத்தில் புதிய பாரத எழுத்தறிவு திட்டம்: சோகத்தொரையில் சிறப்பாக செயல்படுத்த ஏற்பாடு

/

கிராமத்தில் புதிய பாரத எழுத்தறிவு திட்டம்: சோகத்தொரையில் சிறப்பாக செயல்படுத்த ஏற்பாடு

கிராமத்தில் புதிய பாரத எழுத்தறிவு திட்டம்: சோகத்தொரையில் சிறப்பாக செயல்படுத்த ஏற்பாடு

கிராமத்தில் புதிய பாரத எழுத்தறிவு திட்டம்: சோகத்தொரையில் சிறப்பாக செயல்படுத்த ஏற்பாடு


ADDED : ஜூன் 04, 2024 12:21 AM

Google News

ADDED : ஜூன் 04, 2024 12:21 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்னுார்;சோகத்தொரை சமுதாய கூடத்தில், அரசின் ஒருங்கிணைந்த மையமாக தேர்வு செய்யப்பட்டதற்கான சிறப்பு நிகழ்ச்சி நடந்தது.

மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் அர்ஜுணன் தலைமை வகித்தார். வட்டார மேற்பார்வையாளர் காயத்ரி, இல்லம் தேடி கல்வி ஒருங்கிணைப்பாளர்கள் கணேசமூர்த்தி. பரமசிவம், புதிய பாரத எழுத்தறிவு திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சந்தோஷ் முன்னிலை வகித்தனர்.

புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தில் பள்ளிக்கு விருது கிடைக்க காரணமான. சுகுணா, கல்வி மீட்பு பணிக்காக ஆசிரியர் புஷ்பா, தன்னார்வலர் பிரியா மற்றும் பயிற்சி பெற்றவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

ஊர் தலைவர் பசுபதி பேசுகையில், ''முழு எழுத்தறிவு பெற்ற கிராமமாக அறிவிக்க புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தப்படும்,'' என்றார். தையல் பயிற்சிக்கான சான்றிதழ், 17 மகளிருக்கு வழங்கப்பட்டது.

இல்லம் தேடி கல்வி மையத்தில் பயின்று, 10ம் வகுப்பு தேர்வில் முதல், 3 இடங்களை பிடித்த பிரார்த்தனா, மித்துன், சுஜித் ஆகியோருக்கு ரங்கராஜன், ஸ்ரீதர் பரிசு வழங்கினர்.

மாறுவேட போட்டி, திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் சாதித்த மாணவர்கள் கவுரவிக்கப்பட்டனர்.

பள்ளி கல்வி துறை சார்பில் ஆவண படம் தயாரிக்கப்பட்டது. ஊர் மக்கள் படுகரின பாரம்பரிய நடனமாடினர். ஏற்பாடுகளை தலைமையாசிரியை சுமதி தலைமையில் ஆசிரியர்கள், மக்கள் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us