/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பழநி ஆண்டவர் கோவில் கும்பாபிஷேகம்
/
பழநி ஆண்டவர் கோவில் கும்பாபிஷேகம்
ADDED : ஆக 23, 2024 11:26 PM

அன்னுார்:பிரசித்தி பெற்ற பழநி ஆண்டவர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. மடாதிபதிகள் பங்கேற்றனர்.
குன்னத்தூரில் உள்ள பழமையான பழநி ஆண்டவர் கோவிலில், பல லட்சம் ரூபாய் செலவில் பல்வேறு திருப்பணிகள் செய்யப்பட்டன. இதையடுத்து கும்பாபிஷேக விழா கடந்த 21ம் தேதி மாலை திருக்குட ஊர்வலத்துடன் துவங்கியது.
108 மகளிர் பங்கேற்ற திருவிளக்கு வழிபாடு நடந்தது. நேற்று முன்தினம் விமான கலசங்கள் நிறுவுதலும், மாலையில் மூலமூர்த்திகளை ஆதார பீடத்தில் வைத்து, எண் வகை மருந்து சாத்துதலும் நடந்தது. இரவு ஆதிமுருகன் வள்ளி கும்மியாட்டம் நடந்தது.
நேற்று காலை 7:30 மணிக்கு, சிரவை ஆதீனம் குமரகுருபர சாமிகள், பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகள் ஆகியோர் விமான கலசங்களுக்கும், மூலமூர்த்திகளுக்கும் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்து வைத்தனர்.
இதையடுத்து, அலங்கார பூஜை, பேரொளி வழிபாடு நடந்தது. காலை 10:30 மணிக்கு அச்சம்பாளையம் சண்முகம் குழுவின் பக்தி பஜனை நிகழ்ச்சி நடந்தது. சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பல ஆயிரம் பக்தர்கள் பங்கேற்றனர்.