sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

ஊராட்சி ஒன்றிய பள்ளி நிகழ்ச்சி: சுற்றுச்சூழலை பாதுகாக்க உறுதிமொழி

/

ஊராட்சி ஒன்றிய பள்ளி நிகழ்ச்சி: சுற்றுச்சூழலை பாதுகாக்க உறுதிமொழி

ஊராட்சி ஒன்றிய பள்ளி நிகழ்ச்சி: சுற்றுச்சூழலை பாதுகாக்க உறுதிமொழி

ஊராட்சி ஒன்றிய பள்ளி நிகழ்ச்சி: சுற்றுச்சூழலை பாதுகாக்க உறுதிமொழி


ADDED : ஜூன் 08, 2024 12:33 AM

Google News

ADDED : ஜூன் 08, 2024 12:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பந்தலுார்;பந்தலுார் அருகே மேபீல்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில், கனரா வங்கி நிர்வாகம், உலக சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினம் மற்றும் மரங்கள் நடுநிகழ்ச்சியை நடத்தியது.

பள்ளி தலைமை ஆசிரியர் பால்விக்டர் வரவேற்றார். கனரா வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலைய இயக்குனர் சண்முகவேல், 'இயற்கையை பாதுகாப்பது மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாப்பதன் அவசியம்,' குறித்து பேசினார். தொடர்ந்து மரம் வளர்ப்பு மற்றும் இயற்கை பாதுகாப்பு குறித்த உறுதிமொழி எடுத்து கொள்ளப்பட்டது. பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது.

நிகழ்ச்சியில், பயிற்சியாளர் சுரேஷ்குமார், பயிற்றுனர் ராபிகா, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீஜன் மற்றும் ஆசிரியர்கள் பயிற்சி பெண்கள் பங்கேற்றனர். பி.டி.ஏ. தலைவர் ரசீது நன்றி கூறினார்.

பந்தலுார் நுாலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், நுாலகர் அறிவழகன் வரவேற்றார். கூடலுார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய பொதுச் செயலாளர் சிவசுப்ரமணியம் தலைமை வகித்து சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார்.

தேவாலா வனச்சரகர் சஞ்சீவி, வனவர் பாலகிருஷ்ணன், சுகாதார ஆய்வாளர் (பொ) மலர்க்கொடி, 'ஆல் தி சில்ட்ரன்' மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஜித் உட்பட பலர் பங்கேற்றனர்.

சேரங்கோடு ஊராட்சி சார்பில் எருமாடு அருகே ஆண்டஞ்சிரா குளத்தின் சுற்று பகுதியில் ஊராட்சி மன்ற தலைவர் லில்லி, துணை தலைவர் சந்திர போஸ் தலைமையில் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது. நிகழ்ச்சியில், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுரேஷ்குமார், ஊராட்சி செயலாளர் சஜித், பணி மேற்பார்வையாளர் ஷர்மிளா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us