/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பாதங்களை பதம் பார்க்கும் கம்பிகளால் பயணிகள் பாதிப்பு
/
பாதங்களை பதம் பார்க்கும் கம்பிகளால் பயணிகள் பாதிப்பு
பாதங்களை பதம் பார்க்கும் கம்பிகளால் பயணிகள் பாதிப்பு
பாதங்களை பதம் பார்க்கும் கம்பிகளால் பயணிகள் பாதிப்பு
ADDED : மார் 06, 2025 09:31 PM

கோத்தகிரி; கோத்தகிரி பஸ்நிலைய தளம் பெயர்ந்து, கம்பிகள் வெளியே நீண்டு கொண்டிருப்பதால், பயணிகள் தடுக்கி விழுந்து காயம் அடைந்து வருகின்றனர்.
கோத்தகிரி பஸ் நிலையத்தில் இருந்து, கோவை, மதுரை உள்ளிட்ட சமவெளி பகுதிகள் உட்பட, உள்ளூர் கிராமங்களுக்கு, 55 அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. தவிர, பல்வேறு வழித்தடங்களில் மினி பஸ்களும் இயக்கப்படுகின்றன.
கடந்த, 10 ஆண்டுகளுக்கு முன்பு, பஸ் நிலையம் தரைதளம் சீரமைக்கப்பட்டது. அத்துடன் எந்த பராமரிப்பு பணியும் நடைபெறவில்லை.
இதனால், பஸ் நிலையம் தரைத்தளத்தின் கான்ரீட் தளம் பெயர்ந்து, பல இடங்களில் குழிகள் ஏற்பட்டுள்ளன. தவிர கம்பிகள் நீண்டு கொண்டிருக்கின்றன. பயணிகள் நடந்து செல்லும் போது, கம்பியில் தடுக்கி விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். அதில், பள்ளி மாணவர்கள் பலரது பாதங்களில் காயம் ஏற்பட்டுள்ளது.
எனவே, மக்கள் அதிகளவில் கூடும் பஸ் நிலையம் தரைத்தளத்தை நேர்த்தியாக சீரமைக்க நடவடிக்கை எடுப்பது அவசியம்.