sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

கேர்பெட்டா சாலையில் குப்பை குவியல் துர்நாற்றத்தால் மக்கள் கடும் அவதி

/

கேர்பெட்டா சாலையில் குப்பை குவியல் துர்நாற்றத்தால் மக்கள் கடும் அவதி

கேர்பெட்டா சாலையில் குப்பை குவியல் துர்நாற்றத்தால் மக்கள் கடும் அவதி

கேர்பெட்டா சாலையில் குப்பை குவியல் துர்நாற்றத்தால் மக்கள் கடும் அவதி


ADDED : ஜூன் 12, 2024 09:49 PM

Google News

ADDED : ஜூன் 12, 2024 09:49 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோத்தகிரி, - கோத்தகிரி கேர்பெட்டா சாலையில் குப்பைகள் அகற்றப்படாமல், துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

கோத்தகிரி சிறப்பு நிலை பேரூராட்சிக்கு உட்பட்ட, கோடநாடு - கேர்பெட்டா சாலையில், லாங்வுட் சோலை நுழைவு வாயிலில், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில், குப்பைத்தொட்டி வைக்கப்பட்டுள்ளது.

அப்பகுதியில் அன்றாடம் சேகரமாகும் குப்பைகள் தொட்டியில் கொட்டப்பட்டு, பேரூராட்சி தூய்மை பணியாளர்களால், உடனுக்குடன் அகற்றப்பட்டு வருகிறது. ஆனால், சில நாட்களாக குப்பைகள் அகற்றப்படாமல் உள்ளது.

இதனால், தொட்டியில் குப்பைகள் நிரம்பி, வெளியில் சிதறி கிடக்கிறது. துர்நாற்றம் வீசி, சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. பிரதான சாலையில் அமைந்துள்ள குடியிருப்பு வாசிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

எனவே, திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கு முக்கியத்துவம் வழங்கி வரும் கோத்தகிரி பேரூராட்சி நிர்வாகம், குப்பைகளை உடனுக்குடன் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us