sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 19, 2025 ,ஐப்பசி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

கல்லட்டி சாலையில் தொடரும் விபத்தால் மக்கள் அச்சம்; தடுக்க போலீசார் 'அலர்ட்'

/

கல்லட்டி சாலையில் தொடரும் விபத்தால் மக்கள் அச்சம்; தடுக்க போலீசார் 'அலர்ட்'

கல்லட்டி சாலையில் தொடரும் விபத்தால் மக்கள் அச்சம்; தடுக்க போலீசார் 'அலர்ட்'

கல்லட்டி சாலையில் தொடரும் விபத்தால் மக்கள் அச்சம்; தடுக்க போலீசார் 'அலர்ட்'


ADDED : ஜூலை 25, 2024 09:54 PM

Google News

ADDED : ஜூலை 25, 2024 09:54 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி: 'ஊட்டி அருகே கல்லட்டி சாலையில் அடிக்கடி நடக்கும் விபத்தால் மக்களிடையே அச்சம் ஏற்பட்டிருப்பதால், விபத்தை தடுக்க போக்குவரத்து போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஊட்டி, -கல்லட்டி சாலை, 36 கொண்டை ஊசி வளைவு கொண்டதாகும். 'செங்குத்தான இச்சாலையில் செல்லும் வாகனங்கள் குறிப்பிட்ட கியரில் செல்ல வேண்டும்,' என, போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். விபத்தை தடுக்க வளைவுகளில் ஆங்காங்கே நவீன கருவிகள் அமைக்கப்பட்டுள்ளது.

எனினும், வெளி மாவட்டம், வெளி மாநில வாகன ஓட்டிகள் இச்சாலையில் வாகனங்களை இயக்க போதிய விழிப்புணர்வு இல்லாததால் கடந்த காலங்களில் சுற்றுலா வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்கியது.

விபத்தால் உயிர் பலி சம்பவங்கள் அதிகரித்ததை அடுத்து, வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநில சுற்றுலா வாகனங்கள் இச்சாலையில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் வாகனங்கள் மட்டும் சென்று வருகிறது.

இந்நிலையில், கடந்த சில வாரங்களாக, இச்சாலையில் உள்ளூர் வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்கியது உள்ளூர் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. போக்குவரத்து போலீசார் தலைக்குந்தா மையபகுதி மற்றும் தலை குந்தா - கல்லட்டி இடையே குறுக்கு சாலைகளில் விதிமீறி செல்லும் வாகனங்களை கண்காணித்து தடுக்க வேண்டும்.

குறிப்பாக, உள்ளூர் மக்களின் ஆதரவுடன் சுற்றுலா வாகனங்கள் செல்வதாகவும் புகார் எழுந்துள்ளது. ஊட்டி போக்குவரத்து போலீசார் போக்குவரத்து விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி விபத்துகளை தடுக்க வேண்டும்.

எஸ்.பி., சுந்தரவடிவேல் கூறுகையில், ''ஊட்டி கல்லட்டி சாலையில் விபத்து அபாயத்தை தடுக்கும் வகையில், போக்குவரத்து போலீசார் சார்பில் சாலையில் ஆங்காங்கே விழிப்புணர்வு பதாகைகள் வைக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி விபத்துக்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,''என்றார்.






      Dinamalar
      Follow us