ADDED : ஜூலை 11, 2024 10:35 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊட்டி : ஊட்டி நகராட்சி கல்வீடு மற்றும் பாலிடெக்னிக் செல்லும் பகுதியில், நகராட்சிக்கு சொந்தமான நிலத்தில், எரிவாயு உற்பத்தி செய்யும் பணி நடந்து வருகிறது.
இங்கு பல்வேறு கழிவுகள் மற்றும் உணவு கழிவுகளை கொண்டு, எரிவாயு உற்பத்தி செய்யும் பட்சத்தில், துர்நாற்றம் வீசுவதுடன், சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. மக்களும், கால்நடைகளும் பாதிக்காத வண்ணம், இந்த பணியை நிறுத்த வேண்டி, ஊட்டி நகராட்சி கவுன்சிலர் குமார் மற்றும் மக்கள் நகராட்சி கமிஷனரிடம் மனு அளித்தனர்.