sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

ரஷ்யர்கள் குறித்து தகவல் தெரிவிக்காத ஹோட்டல்களுக்கு போலீஸ் எச்சரிக்கை

/

ரஷ்யர்கள் குறித்து தகவல் தெரிவிக்காத ஹோட்டல்களுக்கு போலீஸ் எச்சரிக்கை

ரஷ்யர்கள் குறித்து தகவல் தெரிவிக்காத ஹோட்டல்களுக்கு போலீஸ் எச்சரிக்கை

ரஷ்யர்கள் குறித்து தகவல் தெரிவிக்காத ஹோட்டல்களுக்கு போலீஸ் எச்சரிக்கை

1


ADDED : ஆக 18, 2024 02:15 AM

Google News

ADDED : ஆக 18, 2024 02:15 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி:நீலகிரி மாவட்டம், ஊட்டி நவாநகர் பேலஸ் என்ற இடத்தில் நடிகர் சூர்யா நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதற்காக ரஷ்யாவை சேர்ந்த, 155 பேர், 27ம் தேதி சுற்றுலா விசா பெற்று வந்துள்ளனர். அவர்கள், ஊட்டியில் சில ஹோட்டல்களில் தங்கியிருந்தனர்.

பொதுவாக வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் ஊட்டியில் தங்கினால் தங்கும் விடுதி நிர்வாகத்தினர், இதுகுறித்து சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷன் மற்றும் எஸ்.பி., அலுவலகத்திற்கு தெரிவிக்க வேண்டும்.

ஆனால், ரஷ்ய நாட்டினர் குறித்த விபரங்களை ஹோட்டல் நிர்வாகத்தினர் தெரிவிக்கவில்லை. ஊட்டியில் ரஷ்யர்கள் தங்கி இருந்தது குறித்து, போலீசாருக்கு தெரிய வந்ததை அடுத்து, எஸ்.பி., நிஷா உத்தரவின்படி, தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் சுஜாதா ஆய்வு மேற்கொண்டார்.

போலீசார் கூறியதாவது:

ஊட்டி ஹில்பங்க் பகுதியில் உள்ள ஹோட்டல் வெல்பேக் ரெசிடென்சி, ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டல் சபையர் மற்றும் சபையர் கார்டன் வியூ ஆகிய இடங்களில் தங்கிய, 155 பேரில், 42 பேர் கடந்த வாரம் ரஷ்யா திரும்பிய நிலையில், 113 பேர் அங்கு தங்கி இருந்தது விசாரணையில் தெரியவந்தது.

விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கி எச்சரித்தோம். அங்கு தங்கி இருந்த ரஷ்ய நாட்டினர் அனைவரையும் நேற்று முன்தினம் வெளியேற்றினோம்.

இனி வரும் நாட்களில் வெளி நாட்டினர் ஊட்டியில் தங்குவது குறித்து ஹோட்டல் நிர்வாகத்தினர் சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் தெரிவிக்காமல் இருப்பது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us