sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

மலை பாதையில் தவக்கால பரிகார பவனி :ஏசுவின் பாடுகளை விளக்கி பிரார்த்தனை

/

மலை பாதையில் தவக்கால பரிகார பவனி :ஏசுவின் பாடுகளை விளக்கி பிரார்த்தனை

மலை பாதையில் தவக்கால பரிகார பவனி :ஏசுவின் பாடுகளை விளக்கி பிரார்த்தனை

மலை பாதையில் தவக்கால பரிகார பவனி :ஏசுவின் பாடுகளை விளக்கி பிரார்த்தனை


ADDED : மார் 22, 2024 10:06 PM

Google News

ADDED : மார் 22, 2024 10:06 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்னுார்;பர்லியார் முதல் குன்னுார் வரை மலை பாதையில், 18 கி.மீ., துாரம் தவக்கால பவனியில் ஈடுபட்ட பங்கு மக்கள் ஏசுவின் பாடுகளை தத்ரூபமாக விளக்கி வந்தனர்.

குன்னுார் புனித செபஸ்தியார், கேட்டில் பவுண்ட் புனித தோமையார், பர்லியார் அன்னை வேளாங்கண்ணி தேவாலயங்களின் குழுவினர் ஒருங்கிணைந்து, நேற்று பர்லியார் முதல் குன்னுார் வரையிலான மலை பாதையில், 18 கி.மீ., துாரம் சிலுவையை சுமந்தபடி தவக்கால பவனியை நடத்தினர்.

அதில், சிலுவையை ஏந்திய ஏசுவை அடித்து துன்புறுத்துவது உள்ளிட்ட பாடுகளை அறிந்து கொள்ளும் வகையில், ஏசு, கன்னி மரியாள், பிலாத்து படைவீரர்கள், வெரோனிகா, எருசலேம் மக்கள், சீமோன், குருக்கள் போன்ற கதாபாத்திரங்களின் ஆடைகள் அணிந்த பங்கு மக்கள். ஊர்வலத்தில் பங்கேற்று தத்ரூபமாக விளக்கினர்.

இதில், பங்கு தந்தை பாபு சேவியர் தலைமையில், 14 இடங்களில் பிரார்த்தனை செய்தனர்.

ஆராதனையுடன், ஏசுவின் பரிகார பாடல்கள் பாடியும், ஜெபமாலை ஏந்தியும் வந்தனர். குன்னுார் செபஸ்தியார் தேவாலயத்தில் திருப்பலி நடந்தது.

ஏற்பாடுகளை தேவாலய பங்கு குருக்கள், அறங்காவலர்கள் ஆண்டனி, பென்னி, செயலாளர் ஜோசப், நிர்வாகிகள் வில்பர்ட், சதீஷ், பயஸ், மேத்யூஸ் மற்றும் பங்கு மக்கள் செய்தனர்.






      Dinamalar
      Follow us