sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவி பொருட்கள்

/

மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவி பொருட்கள்

மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவி பொருட்கள்

மழையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவி பொருட்கள்


ADDED : செப் 06, 2024 02:57 AM

Google News

ADDED : செப் 06, 2024 02:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பந்தலுார்:பந்தலுார் சுற்று வட்டார பகுதிகளில் மழையால், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மளிகை பொருட்கள் வழங்கப்பட்டன.

பந்தலுார் சுற்று வட்டார பகுதிகளில், கடந்த சில மாதங்களாக மழை பெய்து வரும் நிலையில், பெரும்பாலான வீடுகள் மழையால் பாதிக்கப்பட்டு, மக்கள் தற்காலிக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். அதில், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, ஊட்டி சமூக சேவை சங்கம் சார்பில், மளிகை பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி, தேவாலா தனியார் மண்டபத்தில் நடந்தது.

ஒருங்கிணைப்பாளர் விஜய சுந்தரி வரவேற்றார். இயக்குனர் பாதர் ஜான் ஜோசப் தனிஷ் தலைமை வகித்து, ஏழை மக்கள் பயன் பெறுவதற்கான திட்டங்கள் மற்றும் சுய வேலைவாய்ப்பு பயிற்சிகள் அதற்கான வழிகாட்டல்கள், அமைப்பு மூலம் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து விளக்கி பேசினார். தொடர்ந்து, 144 குடும்பங்களுக்கு அரிசி உள்ளிட்ட மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை திட்ட முதன்மை ஒருங்கிணைப்பாளர் சுப்ரபா தலைமையில், குழுவினர் செய்திருந்தனர்.

கவுன்சிலர்கள் ஹாலன், செல்வராணி, வியாபாரிகள் சங்க தலைவர் சசிகுமார், ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் பயனாளிகள் பங்கேற்றனர். ஒருங்கிணைப்பாளர் பாக்கியவதி நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us