ADDED : ஆக 10, 2026 07:33 PM
அ நிறம் | அளவு
பந்தலுார்: பந்தலுாரில் நீதிமன்ற வளாகம்; அரசு மருத்துவமனை, பள்ளி ஆகியவை அமைந்துள்ள சாலையில் நாள்தோறும் மக்கள் நடமாட்டம் அதிகரித்து காணப்படும்.
இங்கு காய்ந்த நிலையில் ஒரு மரம் உள்ளது. இதன் கிளை முறிந்து வேறு ஒரு மரத்தின் மீது, தொங்கியபடி உள்ளது. பலத்த காற்று வீசும் போது பெரிய மரம் கிளைவிழுந்தால், மருத்துவமனை கட்டடம் இடிவதுடன், மக்களுக்கும் பாதிப்பு ஏற்படும். மக்கள் கூறுகையில்,‘ஆபத்தான நிலையில் உள்ள மரம் குறித்து பலமுறை தகவல் தெரிவித்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளனர். அசம்பாவிதம் நடக்கும் முன், இதனை அகற்ற வேண்டும்,’ என்றனர்.
