ஆவணங்கள் இன்றி எடுத்து சென்ற ரூ.7.71 லட்சம் பறிமுதல்
ஆவணங்கள் இன்றி எடுத்து சென்ற ரூ.7.71 லட்சம் பறிமுதல்
ADDED : மார் 27, 2024 12:57 AM
அ நிறம் | அளவு
கூடலுார்;தமிழக, கர்நாடகா, கேரளா எல்லையான கூடலுார் பகுதியில், தேர்தல் பறக்கும் படையினர், ஆவணங்கள் இன்றி, 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல், எடுத்து செல்லும் தொகையினை பறிமுதல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், நாடுகாணி வனச்சாவடி, தொரப்பள்ளி வனச்சாவடியில் நேற்று காலை முதல் வாகன சோதனை மேற்கொண்டனர். சோதனையில், ஆறு வாகனங்களில், அனுமதி இன்றி எடுத்துச் சென்ற மொத்தம், 7.71 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்தனர்.
இதன் மூலம் நீலகிரி லோக்சபா தொகுதியில் அதிகபட்சமாக கூடலுாரில், 66.33 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்துள்ளனர்.
