sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

சாலையோரம் குப்பை கழிவுகள் அகற்றிய துாய்மை பணியாளர்கள்

/

சாலையோரம் குப்பை கழிவுகள் அகற்றிய துாய்மை பணியாளர்கள்

சாலையோரம் குப்பை கழிவுகள் அகற்றிய துாய்மை பணியாளர்கள்

சாலையோரம் குப்பை கழிவுகள் அகற்றிய துாய்மை பணியாளர்கள்


ADDED : பிப் 27, 2025 09:44 PM

Google News

ADDED : பிப் 27, 2025 09:44 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோத்தகிரி; கோத்தகிரி கட்டபெட்டு பஜாரில் சாலையோரம் குவிந்த குப்பை கழிவுகளை துாய்மை பணியாளர்கள் அகற்றினர்.

கோத்தகிரி-ஊட்டி சாலையில் அமைந்துள்ள கட்டப்பட்டு பஜார் பகுதி, நடுஹட்டி, கக்குச்சி மற்றும் ஜெகதளா ஆகிய ஊராட்சிகளின் எல்லையாக உள்ளது.

இங்கு, வங்கிகள், தனியார் கிளினிக்குகள், வி.ஏ.ஓ., அலுவலகம், இன்கோ தேயிலை தொழிற்சாலை, வர்த்தக நிறுவனங்கள் உட்பட, குடியிருப்புகள் நிறைந்துள்ளன.

மேலும், சமவெளி பகுதிகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் இவ்வழியாக சென்று வருகின்றனர். இதனால், இப்பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.

குடியிருப்புகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் இருந்து வெளியேறும் குப்பைகள், சாலை ஓரங்களில் கொட்டப்பட்டு குவிந்து காணப்படுகிறது.

இந்நிலையில், நடுஹட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கொட்டப்பட்டுள்ள குப்பைகள், நிரந்தர மற்றும் தற்காலிக துாய்மை பணியாளர்களால் அகற்றப்பட்டன.

அதிகாரிகள் கூறுகையில், 'திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை மேம்படுத்த, மக்கள் ஊராட்சிக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்,' என்றனர்.






      Dinamalar
      Follow us