sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 27, 2025 ,மார்கழி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

நகர சுகாதார மையத்தில் பதுங்கிய சாரை பாம்பு; தீயணைப்பு துறையினர் பிடித்தனர்

/

நகர சுகாதார மையத்தில் பதுங்கிய சாரை பாம்பு; தீயணைப்பு துறையினர் பிடித்தனர்

நகர சுகாதார மையத்தில் பதுங்கிய சாரை பாம்பு; தீயணைப்பு துறையினர் பிடித்தனர்

நகர சுகாதார மையத்தில் பதுங்கிய சாரை பாம்பு; தீயணைப்பு துறையினர் பிடித்தனர்


ADDED : ஏப் 14, 2024 11:33 PM

Google News

ADDED : ஏப் 14, 2024 11:33 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்:கூடலுார் நகர சுகாதார மையத்தில் பதுங்கிய சாரை பாம்பை தீயணைப்பு துறையினர் பிடித்து வனப்பகுதியில் விடுவித்தனர்.

கூடலுார் புதிய பஸ் ஸ்டாண்ட் உழவர் சந்தை அருகே, அரசு நகர சுகாதார மையம் செயல்பட்டு வருகிறது. நேற்று மதியம், 3:00 மணிக்கு அங்கு பணிபுரியும் ஊழியர் ஒருவர், கழிவறை உள்ள பகுதிக்கு சென்றபோது, பாம்பு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

தொடர்ந்து, சுகாதார மையத்திலிருந்து ஊழியர்கள் அங்கிருந்து வெளியே வந்தனர். தகவல் அறிந்து அப்பகுதி மக்களும் சுகாதார மையம் முன் குவிந்தனர். தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர், தீயணைப்பு துறை வீரர்கள், கழிப்பிடம் அருகே, பதுங்கி இருந்த, 5 அடி நீளமுள்ள சாரை பாம்பை பிடித்தனர்.

ஊழியர்களும், பொதுமக்களும் நிம்மதி அடைந்தனர். பிடிக்கப்பட்ட பாம்பு வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டது.

பொதுமக்கள் கூறுகையில், 'சிறிய அறையில் சுகாதார மையம் செயல்பட்டு வருகிறது. இடப்பற்றா குறை காரணமாக மருந்துவ பொருட்கள் நெருக்கமாக வைக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக பாம்பு உள்ளே நுழைந்து இருக்கலாம். சம்பவத்தின் போது நோயாளிகள் யாரும் சுகாதார மையத்தில் இல்லை,' என்றனர்.






      Dinamalar
      Follow us