/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கோடையால் கடும் வறட்சி: விலங்குகளுக்கு நீர் தட்டுப்பாடு
/
கோடையால் கடும் வறட்சி: விலங்குகளுக்கு நீர் தட்டுப்பாடு
கோடையால் கடும் வறட்சி: விலங்குகளுக்கு நீர் தட்டுப்பாடு
கோடையால் கடும் வறட்சி: விலங்குகளுக்கு நீர் தட்டுப்பாடு
ADDED : ஏப் 28, 2024 02:01 AM

கூடலுார்: நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தில் கோடைக்காலத்தில் மாயார் ஆறு, ஒம்பட்டா, கேம்பட் உள்ளிட்ட நீராதாரங்கள் வனவிலங்குகளில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வருகிறது. கடந்தாண்டு பருவ மழை பொய்த்தது. நடப்பாண்டு ஏப்., மாதம் இறுதி வரையும் கோடை மழை பெய்யவில்லை.
இதனால் முதுமலை வனப்பகுதி பசுமை இழந்து, வன விலங்குகளுக்கு உணவு, குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்து வருகிறது. யானை, காட்டெருமை உள்ளிட்ட விலங்குகள் உணவு, குடிநீருக்காக இடம் பெயர்ந்துள்ளது.
வனவிலங்குகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய, வனத்துறையினர் மாயார் ஆற்றிலிருந்து வாகனங்கள் வாயிலாக தண்ணீர் எடுத்து வந்து, தொட்டிகளில் சுழற்சி முறையில் தண்ணீர் நிரப்பி வருகின்றனர். உணவு, குடிநீர் கிடைக்காமல் வனவிலங்குகள் உடல் நலம் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதால், வனத்துறையினர் கவலை அடைந்துள்ளனர்.

