sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

நீலகிரியில் விரைவில் தென்மேற்கு பருவமழை: கட்டுப்பாட்டு மைய எண்கள் அறிவிப்பு

/

நீலகிரியில் விரைவில் தென்மேற்கு பருவமழை: கட்டுப்பாட்டு மைய எண்கள் அறிவிப்பு

நீலகிரியில் விரைவில் தென்மேற்கு பருவமழை: கட்டுப்பாட்டு மைய எண்கள் அறிவிப்பு

நீலகிரியில் விரைவில் தென்மேற்கு பருவமழை: கட்டுப்பாட்டு மைய எண்கள் அறிவிப்பு


ADDED : மே 29, 2024 10:02 PM

Google News

ADDED : மே 29, 2024 10:02 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி:

நீலகிரியில் விரைவில் தென்மேற்கு பருவமழை தொடங்க இருப்பதால், மாவட்ட நிர்வாகம் பேரிடர் முன்னெச்சரிக்கை பணிகளை துவக்கியது.

நீலகிரியில், 2024ம் ஆண்டிற்கான தென்மேற்கு பருவமழை விரைவில் தொடங்குகிறது. இம்மாவட்டத்தில், 6 வட்டங்களில், அதிக பாதிப்பு ஏற்பட கூடிய, 283 பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளது.

இப்பகுதிகளை கண்காணிக்க, 42 மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. அக்குழு, 24 மணி நேரம் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அவசர காலங்களில் பாதிக்கப்படும் பொதுமக்கள் தங்க வைக்க,456 பாதுகாப்பு மையங்கள் தயார் நிலையில் உள்ளன. மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை உடனுக்குடன் மேற்கொள்ள வருவாய்துறை, உள்ளாட்சி துறை, காவல் துறை , தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை, நெடுஞ்சாலை, மின்சாரம், பொதுபணித்துறை , மருத்துவம் மற்றும் சுகாதார பணிகள் துறை மற்றும் குடிமை பொருள் வழங்கல் துறைகளை சார்ந்த அலுவலர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

தவிர, அனைத்து வட்டங்களில், 3,500 முதல் நிலை மீட்பாளர்கள் மற்றும் ஆப்தமித்ர திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற 200 பேரிடர் கால நண்பர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

மேலும், மழை மற்றும் இயற்கை இடர்பாடுகளால் பாதிப்பு ஏற்படும் போது பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம்.

தகவல் தெரிவிக்கலாம்


மாவட்ட அவசர கால காட்டுபாட்டு மையத்தில் செயல்படும் கட்டணமில்லா தொலை பேசி எண், 1077 மற்றும் 0423 - 2450034, 2450035 என்ற எண்ணுக்கு பொதுமக்கள் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.

ஆர்.டி.ஓ., மற்றும் தாசில்தார் அலுவலகங்களிலும் கட்டுப்பாட்டு மையங்கள் செயல்படுகிறது. அதன்படி, ஊட்டி - 0423 2445577, குன்னுார் - 0423 - 2206002, கூடலுார் - 04262 - 261295, ஊட்டி வட்டம் - 0423 - 2442433, குன்னுார் வட்டம் - 0423- 2206102, கோத்தகிரி வட்டம் - 04266 - 271718, குந்தா வட்டம் - 0423- 2508123, கூடலுார் வட்டம் - 04262 - 261252, பந்தலுார் வட்டம் - 04262 - 220734 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.






      Dinamalar
      Follow us