ADDED : ஜூன் 17, 2026 04:10 AM
அ நிறம் | அளவு
குன்னுார்: குன்னுாரில் நுாற்றாண்டு பழமை வாய்ந்த புனித அந்தோணியர் திருத்தலத்தில் ஆண்டு திருவிழா நடந்தது
அதில், ஆங்கில, மலையாள திருப்பலிகள், திருத்தேர் பவனி நடந்தது. மதியம் அன்பின் விருந்து இடம்பெற்றது. ஊட்டி மறை மாவட்ட ஆயர் அமல்ராஜ் தலைமையில் ஆடம்பர திருப்பலி நடந்தது. திருத்தலத்தில் துவங்கிய தேர் பவனி மவுண்ட் ரோடு வழியாக பஸ் ஸ்டாண்ட் வரை வந்து மீண்டும் சென்றது. வண்ணமயமான பூக்கள் மற்றும் அலங்காரத்தில் அந்தோணியார் பவனி வந்தார். திரளான பங்கு மக்கள் பங்கேற்றனர்.
