/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ரயில் சிக்னல் பிரச்னை மலை பாதையில் ஆய்வு
/
ரயில் சிக்னல் பிரச்னை மலை பாதையில் ஆய்வு
ADDED : மார் 24, 2024 02:26 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்னூர்:நீலகிரி மாவட்டம் குன்னூர், ஊட்டி மற்றும் மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்படும், மலை ரயிலில் சர்வதேச சுற்றுலா பயணியர் பயணம் செய்ய ஆர்வம் காட்டுகின்றனர். மலை ரயில் பாதையில் சிக்னல்கள் ஆய்வு மேற்கொள்ள நேற்று, மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னுாருக்கு, தென்னக ரயில்வே முதன்மை தலைமை சிக்னல் மற்றும் தொலைத்தொடர்பு பொறியாளர் ஷைலேஷ் குமார் திவாரி வருகை தந்தார்.
மலை ரயில் பாதையில் உள்ள சிக்னல்கள், குன்னுார் ரயில் நிலையத்தில் சிக்னல் அறைக்கு சென்று ஆய்வு மேற்கொண்டு குறைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து, கார் வாயிலாக ஊட்டி மலை ரயில் நிலையத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.

