sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

கோடை வறட்சியில் வாடும் தேயிலை செடிகள்; பாதுகாக்க 'ஸ்பிரிங்ளர்' உதவியுடன் தண்ணீர்

/

கோடை வறட்சியில் வாடும் தேயிலை செடிகள்; பாதுகாக்க 'ஸ்பிரிங்ளர்' உதவியுடன் தண்ணீர்

கோடை வறட்சியில் வாடும் தேயிலை செடிகள்; பாதுகாக்க 'ஸ்பிரிங்ளர்' உதவியுடன் தண்ணீர்

கோடை வறட்சியில் வாடும் தேயிலை செடிகள்; பாதுகாக்க 'ஸ்பிரிங்ளர்' உதவியுடன் தண்ணீர்


ADDED : மார் 02, 2025 11:55 PM

Google News

ADDED : மார் 02, 2025 11:55 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்; கூடலுார் பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், தேயிலை செடிகளை பாதுகாக்க 'ஸ்பிரிங்ளர்' உதவியுடன் தண்ணீர் பாய்ச்சும் பணியை விவசாயிகள் துவங்கியுள்ளனர்.

கூடலுார், பந்தலுார் பகுதியில் கடந்த ஆண்டு, எதிர்பார்த்ததை விட பருவமழை பெய்தது. இதனால், வன விலங்குகளுக்கு உணவு, குடிநீர் தடையின்றி கிடைத்தது. நடப்பு ஆண்டு பருவமழை தொடர்ந்து இரவில் பனி பொழிவின் தாக்கமும், பகலில் வெயிலின் தாக்கமும் அதிகரித்துள்ளது. கோடைக்கு முன்பாகவே வறட்சியின் தாக்கம் அதிகரித்துள்ளது.

மேலும், அரசு மற்றும் தனியார் தேயிலை தோட்டங்கள், சிறு விவசாய தோட்டங்களில் பசுந்தேயிலை மகசூல், பாதிக்கப்பட்டு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், வெயிலின் தாக்கத்திலிருந்து தேயிலை செடிகளை பாதுகாக்க, தேயிலை தோட்டங்களில் 'ஸ்பிரிங்ளர்' மூலம், தினமும் இருமுறை தண்ணீர் பாய்ச்சி வருகின்றனர்.

விவசாயிகள் கூறுகையில், 'கோடை மழை ஏமாற்றி வருவதால், தேயிலை செடிகளில் மகசூல் பாதிக்கப்பட்டு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. தற்காலிக தீர்வாக, 'ஸ்பிரிங்ளர்' உதவியுடன் தேயிலை செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சி, பாதுகாத்து வந்தாலும், மழை பெய்தால் மட்டுமே இதற்கு தீர்வாகும். இதனால், கோடை மழையை எதிர்பார்த்துள்ளோம்,' என்றனர்.






      Dinamalar
      Follow us