sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

ஊட்டியில் ரயில் மோதி வாலிபர் பலி

/

ஊட்டியில் ரயில் மோதி வாலிபர் பலி

ஊட்டியில் ரயில் மோதி வாலிபர் பலி

ஊட்டியில் ரயில் மோதி வாலிபர் பலி


ADDED : மே 31, 2024 02:38 AM

Google News

ADDED : மே 31, 2024 02:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி:நீலகிரி மலை ரயில் மோதி வாலிபர் பலியானார்.

இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், நேற்று மதியம் 2 : 00 மணிக்கு ஊட்டி ரயில் நிலையத்திலிருந்து, மேட்டுப்பாளையம் செல்லும் மலை ரயில் ஊட்டியில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் பர்னில் பேலஸ் பகுதியில் சென்றபோது, வாலிபர் மீது ரயில் மோதியது. இதை கவனித்த என்ஜின் ஓட்டுனர் இதுகுறித்து ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். எஸ்.ஐ. ராமன் தலைமையிலான ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். இதில் தண்டவாளத்தின் அருகில் தூக்கி வீசப்பட்டு 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார். உடலை கைப்பற்றி போலீசார் பிரேத பரிசோதனைக்கு ஊட்டி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அனுப்பி வைத்தனர்.விசாரணையில் அவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து இதுவரை தெரியவில்லை. அவரிடம் செல்போன் உள்ளிட்ட எந்த தகவலும் இல்லை. ரோஸ் கலர் முழுக்கை சட்டை அணிந்திருந்தார். தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரயில் மோதி இறந்தாரா அல்லது தற்கொலை செய்யும் எண்ணத்துடன் ரயில் வரும்போது , தண்டவாளத்திற்கு வந்தாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us