/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
இறந்து கிடந்த செந்நாய் வனத்துறையினர் விசாரணை
/
இறந்து கிடந்த செந்நாய் வனத்துறையினர் விசாரணை
ADDED : ஜூலை 24, 2024 12:14 AM

கூடலுார்:முதுமலை மசினகுடி அருகே, செந்நாய் உயிரிழந்தது குறித்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
முதுமலை புலிகள் காப்பகம் மசினகுடி கோட்டம், சிங்காரா வனச்சரக வனப்பகுதியில் வன ஊழியர்கள் நேற்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். வனப்பகுதியில், உடலில் காயங்களுடன் செந்நாய் இறந்து கிடந்தது தெரியவந்தது. அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
மசினகுடி துணை இயக்குனர் அருண்குமார், சிங்காரா வனச்சரகர் தனபால் மற்றும் வன ஊழியர்கள், இறந்த செந்நாயின் உடலை ஆய்வு செய்தனர்.
அதன் உடலை முதுமலை கால்நடை டாக்டர் ராஜேஷ்குமார் பிரேத பரிசோதனை செய்தார். வனத்துறையினர் கூறுகையில், 'இறந்த பெண் செந்நாய்க்கு ஏழு வயது இருக்கும்.
புலி தாக்கியதில் உயிரிழந்துள்ளது,' என்றனர்.

