sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

நள்ளிரவில் சாலையின்குறுக்கே விழுந்த மரம்: அகற்றிய தீயணைப்பு துறை

/

நள்ளிரவில் சாலையின்குறுக்கே விழுந்த மரம்: அகற்றிய தீயணைப்பு துறை

நள்ளிரவில் சாலையின்குறுக்கே விழுந்த மரம்: அகற்றிய தீயணைப்பு துறை

நள்ளிரவில் சாலையின்குறுக்கே விழுந்த மரம்: அகற்றிய தீயணைப்பு துறை


ADDED : மே 26, 2024 11:32 PM

Google News

ADDED : மே 26, 2024 11:32 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பந்தலுார்:பந்தலுார் கையுன்னி பகுதியில் நள்ளிரவில் மரம் விழுந்ததால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பந்தலுார் அருகே கையுன்னி பகுதியில் இருந்து அய்யன்கொல்லி செல்லும் சாலை அமைந்துள்ளது. அங்கு, நேற்று முன்தினம் நள்ளிரவு, 11:00 மணிக்கு சாலையோரம் இருந்த அயனி பலா மரம் ஒன்று அடியோடு பெயர்ந்து சாலையின் குறுக்கே விழுந்தது. இதனால், இந்த வழியாக வாகனங்கள் ஏதும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்த பந்தலுார் தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான வருவாய் துறையினர், சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு மேற்கொண்டதுடன், கூடலுார் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

நிலைய பொறுப்பு அலுவலர் மார்ட்டின் தலைமையிலான குழுவினர், இரவு ஒரு மணிக்கு சம்பவ இடத்திற்கு வந்து விடியற்காலை, 3:00 மணி வரை சாலையின் குறுக்கே விழுந்த மரத்தை அறுத்து அகற்றினர். அதனை தொடர்ந்து வாகனங்கள் சென்றன. சம்பவம் நடந்த இடத்தில் மின் கம்பிகள் அறுந்து மின் சப்ளை துண்டிக்கப்பட்டது. நேற்று காலை மின் ஊழியர்கள் அதனை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.






      Dinamalar
      Follow us