sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

மர்மமான முறையில் செந்நாய்கள் உயிரிழப்பு; வனத்துறையினர் விசாரணை

/

மர்மமான முறையில் செந்நாய்கள் உயிரிழப்பு; வனத்துறையினர் விசாரணை

மர்மமான முறையில் செந்நாய்கள் உயிரிழப்பு; வனத்துறையினர் விசாரணை

மர்மமான முறையில் செந்நாய்கள் உயிரிழப்பு; வனத்துறையினர் விசாரணை

1


ADDED : ஆக 29, 2024 02:52 AM

Google News

ADDED : ஆக 29, 2024 02:52 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார் : முதுமலை புலிகள் காப்பகம், மசினகுடி கோட்டம், சீகூர் வனச்சரகம், ஆனைகட்டி அருகே, வனப்பகுதியில், நேற்று முன்தினம், மாலை வன ஊழியர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, வனப்பகுதியில் இரண்டு செந்நாய்கள் இறந்து கிடந்தது தெரிய வந்தது.

மசினகுடி துணை இயக்குனர் அருண்குமார், சீகூர் வனச்சரகர் தயானந்தன் உடல்களை நேற்று, ஆய்வு செய்தனர். முதுமலை கால்நடை டாக்டர் ராஜேஷ்குமார், மாயாறு அரசு கால்நடை டாக்டர் இந்துஜா ஆகியோர் அதன் உடல்களை பிரேத பரிசோதனை செய்தார்.

வனத்துறையினர் கூறுகையில், 'இறந்த இரண்டு பெண் செந்நாய்களுக்கு, 4 வயது இருக்கும். உயிரிழந்தற்கான காரணம் தெரியாத நிலையில், ஆய்வக பரிசோதனைக்காக, உடல் மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன. ஆய்வு முடிவுகள் கிடைத்த பின், உயிரிழந்தற்கான காரணம் தெரிய வரும். அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.






      Dinamalar
      Follow us