sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

விபத்தை ஏற்படுத்தும் சாலை கண்டு கொள்ளாத நெடுஞ்சாலை துறை

/

விபத்தை ஏற்படுத்தும் சாலை கண்டு கொள்ளாத நெடுஞ்சாலை துறை

விபத்தை ஏற்படுத்தும் சாலை கண்டு கொள்ளாத நெடுஞ்சாலை துறை

விபத்தை ஏற்படுத்தும் சாலை கண்டு கொள்ளாத நெடுஞ்சாலை துறை


ADDED : மார் 28, 2024 11:30 PM

Google News

ADDED : மார் 28, 2024 11:30 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பந்தலுார்;பந்தலுார் மற்றும் உப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து, கேரளா மாநிலம் வயநாடு, மைசூர் மற்றும் நெலக்கோட்டை, தேவர்சோலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் சாலை அமைந்துள்ளது. தமிழக--கேரளா இணைப்பு சாலையாக இருந்தபோதும், இதனை அகலபடுத்தி சீரமைப்பதில் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தொடர்ந்து அலட்சியம் காட்டி வருகின்றனர்.

மிகவும் குறுகலான இந்த சாலையில் வாகனங்கள் வந்து செல்வதில் சிரமம் ஏற்பட்டு வருகிறது. பகுதி மக்கள் மருத்துவ தேவைகளுக்கு, கேரள மாநிலம் செல்லும் நிலையில், அவசர தேவைகளுக்கு ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் செல்வதிலும் சிரமம் ஏற்படுகிறது.

இந்த சாலையின் பல இடங்களிலும், விபத்தை ஏற்படுத்தும் வகையில் குழிகள் மற்றும் சாலையோரங்கள் இடிந்து காணப்படுகிறது.

பெக்கி என்ற இடத்தில் சாலையின் குறுக்கே செல்லும் கால்வாய் உடைந்து, வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்கிக் கொள்கிறது.

இந்த பகுதியில் சாலை துண்டிக்கப்பட்டால், தமிழக- -கேரள போக்குவரத்து முழுமையாக துண்டிக்கப்படும் அபாயம் ஏற்படும். எனவே இந்த சாலையை அகலப்படுத்தி சீரமைக்க வேண்டியது அவசியம் ஆகும்.






      Dinamalar
      Follow us