sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

மூன்று மாதங்களுக்குள் நான்கு முறை சாலையை சீரமைத்த நெடுஞ்சாலை துறை

/

மூன்று மாதங்களுக்குள் நான்கு முறை சாலையை சீரமைத்த நெடுஞ்சாலை துறை

மூன்று மாதங்களுக்குள் நான்கு முறை சாலையை சீரமைத்த நெடுஞ்சாலை துறை

மூன்று மாதங்களுக்குள் நான்கு முறை சாலையை சீரமைத்த நெடுஞ்சாலை துறை


ADDED : செப் 07, 2024 03:17 AM

Google News

ADDED : செப் 07, 2024 03:17 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பந்தலுார்;பந்தலுார் பஜார் சாலையை முழுமையாக சீரமைக்காமல், பெயரளவுக்கு பணி மேற்கொள்ளும் நெடுஞ்சாலைத்துறை மீது மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

தமிழகம்- கேரளா- கர்நாடக மாநில எல்லையில் பந்தலுார் பஜார் பகுதி உள்ளது. இதனால், இப்பகுதியில் மூன்று மாநில வாகனங்கள் தொடர்ச்சியாக வந்து செல்கின்றன.

இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்து சாலையின் மத்திய பகுதியில், 30 அடி துாரத்துக்கு முழுமையாக பெயர்ந்து குழியாக மாறி உள்ளது.

இதனால், மழை காலங்களில் வாகனங்கள் சென்று வருவதில் சிரமம் ஏற்படுவதுடன், இருசக்கர வாகனங்களில் செல்வோர் நிலை தடுமாறி விழுந்து செல்லும் நிலை தொடர்கிறது.

இந்த சாலையை நெடுஞ்சாலை துறையினர் முழுமையாக சீரமைக்காமல், கடந்த மூன்று மாதங்களில், நான்காவது முறையாக பொக்லைன் உதவியுடன் ஜல்லி கற்களை பெயரளவுக்கு பெயர்த்து, சீரமைப்பு செய்து வருகின்றனர்.

மறுபுரம் நல்ல நிலையில் உள்ள சாலையும் பெயர்த்தெடுக்கப்பட்டு, அதில் ஜல்லிக்கற்களை நிரப்புகின்றனர்.

மழை பெய்தால் மழை வெள்ளத்தில் ஜல்லிக்கற்கள் அனைத்தும் அடித்து செல்லும் அபாயம் உள்ளது.

இதை தொடர்ந்து, கவுன்சிலர் ரமேஷ் தலைமையிலான பொதுமக்கள், நெடுஞ்சாலைத்துறையின் கண்துடைப்பு பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து, அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். எனினும், தரமான பணி நடக்கவில்லை.

டிரைவர்கள் கூறுகையில், 'மக்களின் வரி பணத்தை வீணாக்காமல், தரமான முறையில் இந்த சாலையை சீரமைக்க வேண்டும்,' என்றனர்.






      Dinamalar
      Follow us