sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

காபியில் சயனைடு கலந்து பெண் கொலை கணவர், மாமியார் உட்பட மூவர் கைது

/

காபியில் சயனைடு கலந்து பெண் கொலை கணவர், மாமியார் உட்பட மூவர் கைது

காபியில் சயனைடு கலந்து பெண் கொலை கணவர், மாமியார் உட்பட மூவர் கைது

காபியில் சயனைடு கலந்து பெண் கொலை கணவர், மாமியார் உட்பட மூவர் கைது

2


ADDED : செப் 01, 2024 01:54 AM

Google News

ADDED : செப் 01, 2024 01:54 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊட்டி: நீலகிரி மாவட்டம், ஊட்டி அருகே பென்னட் மார்க்கெட் பகுதியைச் சேர்ந்தவர் ஜவஹருல்லா, 50; ஆட்டோ டிரைவர். இவரது மனைவி யாஸ்பின், 47. இவர்களுக்கு இம்ரான், 27, முக்தார், 24, என, இரண்டு மகன்கள் உள்ளனர்.

இம்ரான், ஊட்டி வண்டிச்சோலை பகுதி அப்துல் சமது- - நிலாபர் நிஷா தம்பதியின் மகள் ஆஷிகா பர்வீன், 23, என்பவரை காதலித்து, இரண்டு ஆண்டுக்கு முன் திருமணம் செய்தார். 2 வயது குழந்தை உள்ளது. யாஸ்பினுக்கும்-, ஆஷிகா பர்வீனுக்கும் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டுள்ளது.

ஜூன் 23ல் வாயில் நுரை தள்ளியவாறு மர்மமான முறையில் ஆஷிகா பர்வீன், கணவர் வீட்டில் இறந்து கிடந்தார். மகள் சாவில் மர்மம் இருப்பதாக பெற்றோர் ஊட்டி போலீசில் புகார் அளித்தனர். போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

பிரேத பரிசோதனை அறிக்கையில், காபியில் சயனைடு விஷம் கலந்து ஆஷிகா கொல்லப்பட்டது தெரியவந்துள்ளது.

அப்துல் சமது-, நிலாபர் நிஷா மற்றும் உறவினர்கள், ஆஷிகா கணவர் குடும்பத்தினரை உடனே கைது செய்யக்கோரி, ஊட்டி போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர். ஏ.டி.எஸ்.பி., சவுந்தரராஜன், டவுன் டி.எஸ்.பி., யசோதா பேச்சு நடத்தி, நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

போலீசார் கூறியதாவது:

யாஸ்பின் குடும்பத்தினர், ஆஷிகாவிடம், 20 லட்சம் ரூபாய் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியுள்ளனர். அவரால் பணம் கொடுக்க முடியவில்லை.

ஊட்டி மெயின் பஜார் பகுதியில் ஒரு நகை பட்டறையில் சயனைடு விஷத்தை வாங்கி காபியில் கலந்து ஆஷிகாவுக்கு கொடுத்து கொலை செய்துள்ளனர்.

புனேவில் நடந்த பரிசோதனையில், உடலில் சயனைடு கலந்திருப்பது உறுதியாகியுள்ளது. யாஸ்பின், இம்ரான், முக்தார் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் சிலருக்கு தொடர்பிருப்பதாக தெரியவந்ததை அடுத்து விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us