sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

அரசு ஐ.டி.ஐ.,யில் சேர நாளை கடைசி நாள்

/

அரசு ஐ.டி.ஐ.,யில் சேர நாளை கடைசி நாள்

அரசு ஐ.டி.ஐ.,யில் சேர நாளை கடைசி நாள்

அரசு ஐ.டி.ஐ.,யில் சேர நாளை கடைசி நாள்


ADDED : ஜூன் 05, 2024 09:57 PM

Google News

ADDED : ஜூன் 05, 2024 09:57 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெ.நா.பாளையம் : அரசினர் தொழிற்பயிற்சி (ஐ.டி.ஐ.,) நிலையத்தில் சேர நாளை கடைசி நாள் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில், 2024ம் ஆண்டுக்கான சேர்க்கை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சியில் சேர்வதற்கான கல்வி தகுதி எட்டாம் வகுப்பு அல்லது பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், வயது வரம்பு ஆண்களுக்கு, 14 முதல், 40 வயது வரை என்றும், பெண்களுக்கு உச்சவரம்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பயிற்சியில் சேர விரும்பும் பயிற்சியாளர்கள் அதற்கான விண்ணப்பத்தினை, www.skilltraining.tn.gov.in என்ற இணையதள முகவரியில் நாளை இரவு, 12.00 மணிக்குள் பதிவு செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

எலக்ட்ரிகல், மெக்கானிக் மோட்டார் வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. தொழிற் பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெறும் பயிற்சியாளர்களுக்கு பாட புத்தகங்கள், வரைபட கருவிகள், லேப்டாப், சைக்கிள், பேருந்து பயணம் செய்ய இலவச அடையாள அட்டை, சீருடை, காலணிகள், மாதாந்திர உதவித் தொகை, 750 ரூபாய், மூவலூர் இராமாமிர்தம் திட்டத்தின் கீழ் தகுதி உள்ள பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் மாதந்தோறும் வழங்கப்படுகிறது. பயிற்சியில் சேர, மேலும் விபரங்களுக்கு, 88254 34331 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us