sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

முதுமலையில் மழையிலும் சுற்றுலா பயணிகள் வருகை

/

முதுமலையில் மழையிலும் சுற்றுலா பயணிகள் வருகை

முதுமலையில் மழையிலும் சுற்றுலா பயணிகள் வருகை

முதுமலையில் மழையிலும் சுற்றுலா பயணிகள் வருகை


ADDED : ஜூலை 03, 2024 02:22 AM

Google News

ADDED : ஜூலை 03, 2024 02:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கூடலுார்;முதுமலையில் மழை பெய்து வரும் நிலையில், வார இறுதி நாட்களில் தெப்பக்காடு யானைகள் முகாமுக்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.

முதுமலையில் நடப்பாண்டு துவக்கம் முதல் பருவமழை ஏமாற்றியதால், வனப்பகுதி பசுமை இழந்தது. வனவிலங்குகள் உணவு குடிநீர் தேடி இடம்பெயர்ந்தன. கோடையில் இங்கு வந்த சுற்றுலா பயணிகள், பசுமை இழந்த வனப்பகுதியில் வனவிலங்குகளை பார்க்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

இந்நிலையில், மே மாதம் கோடை மழை பெய்தது தொடர்ந்து, வனப்பகுதி பசுமைக்கு மாறியது. வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்தது. கோடை விடுமுறை முடிந்து, பள்ளி கல்லுாரி துவங்கிய நிலையில், கடந்த மாதம் துவத்தில் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது.

இந்நிலையில் பருவமழை துவங்கிய நிலையில் வார இறுதி விடுமுறை நாட்களில், தெப்பக்காடு யானைகள் முகாமுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.

சுற்றுலாப் பயணிகள் கூறுகையில், 'பருவமழையின் போது, முதுமலைக்கு வருவதால் பசுமையான வனத்தையும் மிதமான காலநிலையும் ரசிக்க முடிகிறது. இதனால் கோடை காலத்தை விட பருவமழை காலத்தில் வருவது மறக்க முடியாத அனுபவமாக உள்ளது,' என்றனர்.






      Dinamalar
      Follow us