sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 21, 2025 ,மார்கழி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

/

மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு


ADDED : மே 20, 2024 11:33 PM

Google News

ADDED : மே 20, 2024 11:33 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோத்தகிரி:கோத்தகிரி பகுதியில் மழை காரணமாக, இரண்டு இடங்களில் மரம் விழுந்து, போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில், கடந்த சில நாட்களாக, தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த மழையில், ஆங்காங்கே மரங்கள் விழுந்து, லேசான மண் சரிவு ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில், கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று கனமழை பெய்து, மாலை வரை நீடித்தது. மாலை, 4:00 மணி நிலவரப்படி அதிகபட்சமாக, கீழ் கோத்தகிரியில், 43 மி. மீ., கோடநாட்டில், 32 மி.மீ., மழை பதிவானது.

அதில், ஊட்டி-கோத்தகிரி சாலையில் கட்டபெட்டு பகுதி மற்றும் கீழ் கோத்தகிரி சோலுார்மட்டம் இடையே, இரண்டு இடங்களில் சாலையோரத்தில் போதிய வேர் பிடிப்பு இல்லாமல் இருந்த மரங்கள் விழுந்தன.

தகவல் அறிந்த கோத்தகிரி தீயணைப்பு துறை வீரர்கள், சம்பவ இடத்திற்கு சென்று மரத்தை அகற்றி சீரமைத்தினர். இதனால், இவ்விரு சாலைகளில், ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us